‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களின் வெற்றியை தொடர்ந்து, தற்போது ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவரையும் இணைத்து, ஆர்ஆர்ஆர் என்கிற படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் ராஜமவுலி. இந்தப்படம் சுதந்திர போராட்ட வீரர்களான அல்லுரி சீதாராம ராஜு மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை தழுவி உருவாகிகிறது. இதில் கொமரம் பீம் கதாபாத்திரத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்க, ராமராஜு கதாபாத்திரத்தில் ராம்சரண் நடிக்கிறார்.
கொரோனா தாக்கம் மற்றும் ஊரடங்கு காரணமாக இடையில் சில மாதங்கள் நிறுத்தப்பட்டிருந்த இந்தப்படத்தின் படப்பிடிப்பு, கடந்த மாதம் முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் இந்தப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை இன்று(ஜன., 19) முதல் படமாக்க துவங்கியுள்ளார் ராஜமவுலி.
ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம்சரண் இருவரும் ஒருவர் கையை ஒருவர் இறுக்கி பிடித்தபடி, கைகள் மட்டுமே தெரியும்படியான புகைப்படத்தை மட்டும் பகிர்ந்து கொண்டுள்ள இயக்குனர் ராஜமவுலி, “என்னுடைய ராமராஜுவும் பீமும் எதை அடைவதற்கு விரும்பினார்களோ, அதை சாதிப்பதற்காக ஒன்று சேர்ந்திருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தப்படம் ஆங்கிலேயர் காலகட்டத்தில் நிகழும் கதை என்பதாலும் இந்த புகைப்படத்தின் பின்னணியில் ஆங்கிலயேர் கொடியும் ஏதோ ஒரு போட்டியை வேடிக்கை பார்க்கும் விதமாக காலரியில் அமர்ந்திருக்கும் கூட்டத்தையும் பார்க்கும்போது இது சண்டைக்காட்சி அல்லது பந்தய காட்சியாக இருக்கும் என்றே தெரிகிறது..