கேரள ரசிகர்கள் தள்ளுமுள்ளு! விஜய்யின் கார் கண்ணாடி உடைந்தது!! | இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி! | ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி |
நடிகர் பிரகாஷ்ராஜ் தற்போது தனது பாதுகாப்பிற்காக மெய்காவலர்களை (பாடிகார்ட்ஸ்) நியமித்துள்ளார். அவர் எங்கு சென்றாலும் சீருடை அணிந்த பாதுகாவலர்கள் உடன் செல்கிறார்கள். யாரையும் அவர்கள் பிரகாஷ்ராஜின் அருகில் நெருங்க விடுவதில்லை.
இதுகுறித்து பிரகாஷ்ராஜ் கூறியதாவது:
சமீபக காலமாக பாரதிய ஜனதா கட்சியினர் எனது உயிருக்கு அச்சுறுத்தல் வரும் விதமாக பேசி வருகிறார்கள். உயிரின் மதிப்பு என்ன என்பது எனக்குத் தெரியும். எனக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று அச்சப்படுகிறேன். இதனால்தான் எனக்கும், என் குடும்பத்தாருக்கு பாதுகாவலர்களை நியமித்திருக்கிறேன்.
நான் மதவாதத்திற்கு எதிரா கேள்வி எழுப்புகிறவன். பாரதிய ஜனதா கட்சியை தொடர்ந்து எதிர்த்து போராடுவேன். பாரதிய ஜனதா கட்சியின் தவறுகளை தொடர்ந்து சுட்டிக்காட்டுவேன். எனக்கு கர்நாடக முதல்வர் சித்தராமய்யாவை பிடிக்கும் அதற்காக அவருக்காகவும், அவர் கட்சிக்காகவும் பிரச்சாரம் செய்ய மாட்டேன். என்றார் பிரகாஷ்ராஜ்.