யார் ஹீரோ... திணறும் நெல்சன்... 47 ஆண்டுகளுக்கு பின் இணைந்த ரஜினி, கமல் பட அறிவிப்பு வீடியோ வெளியீடு | என் கவுன்டர் ஸ்பெஷலிஸ்டாக நடிக்கும் வெற்றி | பொன்னியின் செல்வன் பாடலில் தாகர் குடும்பத்திற்கு கிரெடிட் கொடுக்க ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்புதல் | பிளாஷ்பேக் : மோகன்லால் கேரக்டரில் நடித்த பாண்டியராஜன் | பிளாஷ்பேக்: நாடகத்தால் வெற்றி பெற்ற படம் | துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன்… தொடரும் காதல்?? | மார்ச் 6ல் வெளியாகிறது ரச்சிதா நடித்த ஹாரர் படம் | சாய் பல்லவி நடிப்பை முன்மாதிரியாக கொண்டு நடித்தேன் : மானசா வாரணாசி ஓபன் டாக் | சொந்த தொகுதியிலேயே வீடு கட்டும் பணியை துவங்கிய பாலகிருஷ்ணா | மும்பை படப்பிடிப்பில் படக்குழுவினருக்காக சென்னையிலிருந்து உணவு வரவழைத்த பிரபாஸ் |

சினிமா மறந்து விட்ட முக்கிய நடிகைகளில் ஒருவர் பாக்யஸ்ரீ. கேரளாவைச் சேர்ந்த பாக்யலட்சுமி பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். சினிமா நடிப்பில் ஆர்வம் கொண்டு மலையாத்தில் சில படங்களில் நடித்த பாக்யலட்சுமி, பெயரை பாக்யஸ்ரீ என்று மாற்றி தமிழில் 'தேவியின் திருவிளையாடல்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பிறகு 'வளையல் சத்தம்' என்ற படத்தின் மூலம் பிரபலமானார்.
மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லாலுடன் நடித்தவர் தமிழில் 'கொடி பறக்குது' படத்தில் ரஜினி ஜோடியாக நடித்தார். ஜெயின் ஜெயபால், தாயா தாரமா, ஆளை பார்த்து மாலை மாத்து, சின்ன வாத்தியார், சின்ன கண்ணம்மா உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். குறிப்பாக தற்போதைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடித்த 'ஒரே ரத்தம்' படத்தில் அவருடன் நடித்தார்.
பின்னர் குஜராத் தொழில் அதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டிலாகிவிட்டார். பின்னர் மீண்டும் சென்னை திரும்பி சில தொலைக்காட்சி தொடர்களில் நடித்தார்.




