காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் |

கேரளாவில் கொச்சியில் சமீபத்தில் 'ஹார்ட்டஸ் 2025' என்கிற பெயரில் கலாச்சார விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர்கள் கமல்ஹாசன், மோகன்லால், மஞ்சு வாரியர் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர். அப்போது நடிகர் கமல்ஹாசன் அரசியல் குறித்தும் பேசினார்.
அங்கிருந்த மஞ்சு வாரியர் பேசும்போது, “என்னை அரசியலில் சேரச்சொல்லி பல இடங்களில் இருந்து அழைப்பு வந்தது. ஆனால் அரசியலில் சேரும் அளவிற்கு எனக்கு போதிய அறிவு இல்லை. அரசியலில் சேர வேண்டும் என்றால் ஒருவருக்கு நிச்சயம் நல்ல அறிவு இருக்க வேண்டும்” என்று கூற, அருகில் இருந்த கமல், “அப்படியா நினைக்கிறீர்கள்?” என்று கேட்டு சிரித்தார்.
தொடர்ந்து கமல்ஹாசன் அவரிடம் கூறும்போது, “உங்களுடைய அரசியல் நம்பிக்கைகளை நீங்கள் பர்சனல் ஆக வைத்துக் கொள்வதற்கு உங்களுக்கு முழு உரிமை இருக்கிறது. ஆனால் நீங்கள் கட்டாயம் ஓட்டுச்சாவடிக்கு வர வேண்டும். இது ஒன்று தான் என்னுடைய கோரிக்கை. நீங்கள் அரசியலுக்கு வரக்கூடிய நேரமும் அதுதான். ஓட்டுச்சாவடி ரொம்பவே அழுக்கடைந்த இடமாக இருந்தாலும் கூட நீங்கள் கட்டாயம் வர வேண்டும்” என்று கூறினார்.




