காலையில் தெலுங்கு முறைப்படி, மாலையில் கொடவா முறைப்படி…விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா திருமணம் | சிம்புவை வைத்து வரலாற்று படத்தை திட்டமிட்ட ராஜூ முருகன்! | சம்பளத்தை அதிரடியாக உயர்த்திய பிரதீப் ரங்கநாதன்! | திருமணத்தை நம்ப முடியவில்லை : அமலாபால் ஓபன் டாக் | ஜி.வி.பிரகாஷின் 'மென்டல் மனதில்' படத்தின் முதல் லிரிக்கல் வீடியோ வெளியானது! | சிவகார்த்திகேயன் அம்மாவாக ரம்யா நம்பீசன் | சினிமா இயக்குவதை மறந்துவிட்டேனா? நடிகர் சமுத்திரக்கனி பதில் | மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன பாரதிராஜா : வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார் | ரஜினிகாந்த், சிபி படத்தில் இணையும் பசில் ஜோசப், பிரியங்கா மோகன் | 'தாய் கிழவி' பார்த்துவிட்டு அக்கா ராதிகாவை கட்டிபிடித்து அழுதது ஏன்? நடிகை நிரோஷா |

அஜித் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை இதுவரை வெளியிடவில்லை. இதனை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் அவர் தொடர்ந்து கார் பந்தயங்களில் கவனம் செலுத்தி வருகிறார். சர்வதேச போட்டியில் முக்கிய கவனம் பெற்று வரும் அஜித்தின் அணி, அதில் அடுத்த கட்டத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் அஜித் மீண்டும் தமிழ்நாட்டில் துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொண்டு இருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தினாலும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. தற்போது கார் பந்தயங்களுக்கு இடைவெளி விட்டு இருப்பதால் இந்த நேரத்தில் துப்பாக்கி பயிற்சி அவர் மேற்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது கொங்கு நாடு ரைபிள் கிளப் நிறுவனர் கே.எஸ்.செந்தில் குமாருடன் இணைந்து, திருப்பூர் வெள்ளக்கோவில் பகுதியிலுள்ள கேஆர்சி பயரிங் ரேஞ்சில் துப்பாக்கி சுடும் பயிற்சியை மேற்கொண்டார். இதுகுறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.




