ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

ராபின் ஹுட் படங்களின் பாணியில் உள்ளூர் ஹீரோக்களை மையமாக கொண்ட படங்களின் முன்னோடி எம்ஜிஆர் நடித்த 'மலைக்கள்ளன்'. பின்னர் அதே பாணியில் பல படங்கள் வந்தது. என்றாலும் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் வெளிவந்த படம் 'மலையூர் மம்பட்டியான்'.
மம்பட்டியானின் பெரிய வெற்றியை தொடர்ந்து அதே பாணியில் பல படங்கள் வந்தது, கும்பக்கரை தங்கையா, கொம்பேரி மூக்கன், கோவில்பட்டி வீரலட்சுமி என்று படங்கள் வரிசை கட்டியது. அவற்றில் முக்கியமானது 'கரிமேடு கருவாயன்'. நாகமலை காட்டில் வாழ்ந்ததாக கிராமிய பாடல்கள் மூலம் அறியப்படும் கருவாயனின் கதையை ராம நாராயணன் திரைப்படமாக்கினார். அவர் இயக்கிய படங்களில் முதல் பக்கா கமர்ஷியல் ஹிட் படம் இது,
இதில் கருவாயனாக விஜயகாந்த் நடித்தார், நாயகியாக நளினி நடித்தார். கதையும் கிட்டத்தட்ட மம்பட்டியான் கதை போன்றதுதான். மம்பட்டியானின் ஆயுதம் நாட்டுத் துப்பாகி கருவாயனின் ஆயுதம் உண்டி வில்.
பாண்டியன், அருணா, ராதாரவி, ஒய்.விஜயா, நம்பியார், செந்தாமரை உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இளையராஜா இசை அமைத்திருந்தார். மம்பட்டியான் அளவிற்கு வெற்றிப் படமாக அமையாவிட்டாலும், ஓரளவிற்கான வெற்றிப்படம்தான்.




