ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

அரண்மனை 4 படத்திற்கு பிறகு தமிழில் தமன்னாவுக்கு புதிய படவாய்ப்புகள் இல்லை. அதேபோல் தெலுங்கிலும் ஒடேலா-2 படத்திற்கு பிறகு புதிய படங்கள் இல்லாத நிலையில் தற்போது ஹிந்தியில் ரோமியோ, ரேஞ்சர், விவன் உள்பட நான்கு படங்களில் நடித்து வருகிறார். தமன்னா அளித்துள்ள ஒரு பேட்டியில், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் நான் நடித்தபோது எந்த படமும் என்னை பேச வைக்கவில்லை. ஆனால் அல்லு அர்ஜுன் நடித்த பத்ரிநாத் என்ற படத்தில் நடித்த பிறகு எனது நடனத்தை பார்த்து பல இயக்குனர்களும் சிறப்பு பாடல்களில் நடனமாட எனக்கு அழைப்பு விடுத்தார்கள். அப்படி தென்னிந்திய படங்கள் மட்டுமின்றி ஹிந்தியிலும் நடனமாடிய பாடல்கள் தான் என்னை பெரிய அளவில் பிரபலப்படுத்தி உள்ளன. அதனால் தொடர்ந்து சிறப்பு பாடல்களில் நடனம் ஆடுவதற்கு தான் ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார் தமன்னா.