தென்னிந்திய சினிமாவில் நிகழ்ந்த அசவுகரியம் : டாப்சி | பவுன்தாயின் சேட்டைகளுடன் பட்டையை கிளப்பும் 'தாய் கிழவி' டிரைலர் | நெகட்டிவா பேசுறவங்களை சுத்தமாக பிடிக்காது என்கிறார் சமந்தா | பிளாஷ்பேக்: பல்வேறு சிறப்பிற்கும், புதுமைக்கும் புகலிடமாய் அமைந்த பைந்தமிழ் திரைக்காவியம் “பாவமன்னிப்பு” | மூன்றாவது முறையாக கிருஷ்ணாவுக்கு ஜோடியான பிந்து மாதவி | மணிரத்னம் படத்தில் இணையும் விஜய் சேதுபதி, சாய் பல்லவி | கோவில் திருவிழாவில் பங்கேற்றதால் சலசலப்பு ; அழகான விளக்கம் கொடுத்த அன்னா பென் | இப்போது வரை என் படங்களை என் குழந்தைகள் பார்க்கவில்லை ; ஷாலினி அஜித் | வெங்கடேஷ் படத்திற்காக தெலுங்கில் நுழைந்த யோகி பாபு | சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா இணைந்து நடிப்பார்களா ? ரசிகர்கள் எதிர்பார்ப்பு |

மறைந்த ராம.நாராயணன் இயக்கத்தில் சீதா நடிப்பில் 1990ம் ஆண்டு வெளியாக பெரிய வெற்றி பெற்ற படம் ஆடி வெள்ளி. அந்த படத்தின் சென்டிமென்ட் காட்சிகளும், பாம்பு, யானை சீன்களும் தமிழகத்தில் பேசப்பட்டன. இந்த படத்தை ரீமேக் செய்ய முயற்சிக்கிறார் ராம நாராயணன் மகன் முரளி ராமசாமி. சீதா வேடத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்தன. அதில் 15 கோடி வரை சம்பளம் கேட்டதாலும், மூக்குத்திஅம்மன் 2 படத்தில் பிஸி ஆனதாலும் அவரை நடிக்க வைக்கவில்லை.
இப்போது திரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடக்கிறதாம். அம்மன் கதையில் நடிக்க வேண்டும் என அவரும் ஆர்வமாக இருக்கிறாராம். இயக்குனர் தேர்வும் நடந்து வருகிறது. திரிஷா ஓகே சொல்லும் பட்சத்தில் வரும் ஆடி வெள்ளியில் இந்த பட அறிவிப்பு வெளியாக வாய்ப்பு. மூக்குத்தி அம்மன் 2வில் திரிஷாவை நடிக்க வைக்க முயற்சித்தார் ஆர்.ஜே.பாலாஜி. ஆனால், அது நடக்கவில்லை. கடைசியில் அந்த படம் சுந்தர்.சி இயக்க, நயன்தாரா நடிப்பில் தயாராகிறது. ஆகவே, இந்த பட வாய்ப்பை விட்டு விடக்கூடாது. நயன்தாரா மாதிரி தானும் பக்தி படத்தில் நடிக்கவே வேண்டும் என்று திரிஷா விரும்புகிறாராம். ஆடி வெள்ளி ரீமேக்கிலும் யானை முக்கியமான பாத்திரத்தில் நடிக்க உள்ளதாம்.