வீட்டை வைத்து கடன் வாங்கி படம் தயாரித்ததுஏன்? ஆண்ட்ரியா | 'வாழு, வாழ விடுங்கள்': கிண்டல், கேலிகளுக்கு கீர்த்தி சுரேஷ் பதில் | அஜித் அடுத்த பட அறிவிப்பு - தொடரும் தாமதம் | மீண்டும் தெலுங்கு இயக்குனர் படத்தில் சூர்யா ? | 'மாஸ்க்': வாய்ப்பில்லாத ஆண்ட்ரியாவுக்கு வாய்ப்புகள் வருமா? | 50 வருட திரையுலக பயணத்தில் இருந்து ஓய்வு பெறும் நடிகை துளசி | 'மெமரிஸ்' இரண்டாம் பாகம் ; பிரித்விராஜ் விருப்பம் | பட விளம்பர மோசடி ; பெண் உள்ளிட்ட ஐவர் மீது நடிகர் யஷ்ஷின் தாயார் போலீசில் புகார் | இரண்டு நாளில் ஒரு மில்லியன் பார்வைகளைத் தொட்ட மஞ்சு வாரியரின் குறும்படம் | மோகன்லால் மம்முட்டி படங்களை பயன்படுத்தியதால் 2 வருட தடை விதித்தனர் ; இயக்குனர் வினயன் |

தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தயாரிக்க, அவரது மகன் ஜோதி கிருஷ்ணா இயக்கி உள்ள படம் 'ஹரி ஹர வீரமல்லு'. ஆந்திர மாநிலத்தில் நவாப்களை எதிர்த்து போரிட்ட ஒரு மாவீரனின் கதை. அந்த மாவீரனாக பவன் கல்யாண் நடித்துள்ளார். அவரது ஜோடியாக நிதி அகர்வால் நடித்தார்.
16ம் நூற்றாண்டு முகலாயக் கால கட்டத்தை பின்னணியாகக் கொண்ட இந்த திரைப்படம், தெலுங்கு மண்ணின் வீரம் நிரம்பிய ஒரு சக்திவாய்ந்த கதையை பதிவு செய்கிறது. பவன் கல்யாண் இந்தப் படத்தில் துணிச்சலும், புரட்சியும் நிறைந்த ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
பாபி தியோல், நாசர், சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மனோஜ் பரமஹம்ஸா மற்றும் ஞானசேகர் ஆகியோர் படத்தின் ஒளிப்பதிவை கையாண்டுள்ளனர்.
ஏ.எம்.ரத்தினத்துடன் இணைந்து மெகா சூர்யா ப்ரொடக்ஷன்ஸ் பேனரின் கீழ் ஏ.தயாகர் ராவ் இப்படத்தை இணைந்து தயாரித்துள்ளார். தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
சுமார் 5 வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட படம் இது. இடையில் கொரோனா, பவன் கல்யாணின் அரசியல் பயணம், தயாரிப்பாளரின் பொருளாதார பிரச்னைகள், ஒரே நேரத்தில் இரண்டு பாகங்களுக்கான படப்பிடிப்பு என பல பிரச்னைகளில் சிக்கி இதன் வெளியீடு தள்ளிப்போடப்பட்டே வந்தது. இந்த நிலையில் படம் வருகிற ஜூலை 24ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.