கூலி படத்திலிருந்து 'சிக்கிட்டு' பாடல் வெளியீடு | போதை பொருள் வழக்கு : கிருஷ்ணாவிடம் போலீசார் விசாரணை | ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார் நடிகை வரலட்சுமி | என்னது, மமிதா பைஜூ கேரக்டர் பெயர் இதுவா? | ஜனநாயகன் படப்பிடிப்பு முடிந்தது : 100 நாள் சுற்றுப்பயணத்துக்கு தயாராகும் விஜய் | ‛குட் நைட்' பட இயக்குனருக்கு சிவகார்த்திகேயன் அளித்த பிறந்தநாள் பரிசு | மேலும் மூன்று மொழிகளில் வெளியான ஏஸ் | தக் லைப் - ஓடிடி ரிலீஸ் குறித்து, அன்று பாராட்டு, இன்று அபராதம் | தனுஷின் 5வது 100 கோடி படம் 'குபேரா' | அதிகபட்ச வியாபாரத்தில் 'கூலி' : மீண்டும் ரஜினியின் உச்சம் |
தமிழ் சினிமாவில் அவ்வப்போது சில பரிசோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. அந்த வரிசையில் தற்போது 'டெவிலன்' என்ற படம் 48 மணி நேரத்தில் தயாராகி உள்ளது. இதை சீகர் பிக்சர்ஸ் சார்பில் பி. கமலக்குமாரி மற்றும் ந. ராஜ்குமார் ஆகியோர் தயாரித்துள்ளனர்.
தயாரிப்பாளர் ராஜ்குமாரே நாயகனாக நடித்துள்ளார். அவருடன் கார்த்திகா, இந்திரா, பிரட்ரிக், பாலாஜி, தோர்தி கிர் மற்றும் சில புதிய முகங்கள் நடித்துள்ளனர். மொத்தம் 47 மணி நேரம் 58 நிமிடங்களில் திரைக்கதை எழுதல், படப்பிடிப்பு, தொகுப்பு, ஒலி, பின்னணி இசை, கலரிங், சப்டைட்டில், மாஸ்டரிங், திரையிடல் உள்ளிட்ட அனைத்து படைப்பணிகளும் முடிக்கப்பட்டன.
இந்த சாதனைக்கு நோபிள் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் அமைப்பு சான்றிதழ் வழங்கி உள்ளது. இதுகுறித்து இயக்குனர் பிகாய் அருண் கூறியதாவது: ஒரு வீட்டுக்குள் படமாக்கப்பட்ட மன அழுத்தம், பயம், ஏமாற்றம் ஆகிய உணர்வுகளை மையமாகக் கொண்ட மனோதத்துவ திகில் திரைப்படம் ஆகும். டெவிலன் இயக்கிய அனுபவம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்று. இது வேகத்தின் மட்டுமல்ல, கதையின் தரத்தையும் பிரதிபலிக்கிறது. நாங்கள் ஒவ்வொரு நொடிக்கும் தீவிர உழைப்புடன் செயல்பட்டோம்” என்றார்.