மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் |

தமிழ் சினிமாவில் சாண்டோ சின்னப்பா தேவருக்குபின், நடிகர் சிவகுமாருக்குபின், நடிகர் யோகிபாபு தீவிர முருகபக்தராக இருக்கிறார் என்று கூறப்படுகிறது. அவர் கேரவனில் உள்ளும், புறமும் அவ்வளவு முருகன் ஓவியங்கள், அறுபடை வீடு முருகனும் அதில் இருக்கிறார். அவர் காரில், வீட்டில் ஏகப்பட்ட முருகன் போட்டோக்கள்.
எந்த ஊர் படப்பிடிப்பு என்றாலும் அருகில் இருக்கும் முருகன் கோயில்களுக்கு அவர் சென்று வழிபடுவதை வாடிக்கையாக வைத்து இருக்கிறார்கள். ஒரு காலத்தில் அவர் சினிமா வாய்ப்பு இல்லாமல், எதிர்காலம் குறித்து கஷ்டப்பட்ட காலத்தில் திருத்தணி சென்று முருகனிடம் மனமுருக வேண்டுவாராம். அவர் ஆசையை முருகன் நிறைவேற்ற இப்போது முருகன் மீது அவருக்கு தனிபிரியம், பாசம், பக்தி. யோகிபாபு தனது மகனுக்கு விசாகன், மகளுக்கு பரணி கார்த்திகா என்று முருகன் திருநாமங்களை பெயராக வைத்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது