படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரோஜா. இயக்குனர் ஆர்.கே.செல்வமணியை 2002ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளார்கள். மேலும், ஆந்திராவிலுள்ள ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இடம் பெற்றுள்ள ரோஜா, அம்மாநிலத்தின் கடந்த ஆட்சி காலத்தில் அமைச்சராகவும் இருந்தார்.
இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரோஜா தனது கணவர் செல்வமணி குறித்து பேசியது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில், ''நான் வீட்டில் எப்போதுமே சண்டை போட்டுக் கொண்டே இருப்பேன். ஆனால் எனது கணவர் செல்வமணி சண்டை போட மாட்டார். அதையும் மீறி அவருக்கு கோபம் வந்தால் அந்த கோபத்தை என்னிடத்தில் காட்டாமல், தனது அறை கதவை மூடிக் கொள்வார். இதற்கு காரணம் அவர் பதிலுக்கு என்னைத் திட்டினால் நான் அழுவேன். அதன் பிறகு என்னை சமாதானப்படுத்த அவர் ரொம்ப கஷ்டப்பட வேண்டியதிருக்கும்'' என்று பேசிய ரோஜா, ''ஆண்கள் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தால் மனைவியிடம் தோற்று போங்கள். மனைவியிடம் சண்டை போட்டுக் கொண்டே இருந்தால் வெளியில் போய் வெற்றி பெற முடியாது'' என்றும் பேசி உள்ளார்.