என் அப்பா இன்ஸ்டாகிராமில் இருக்கிறாரா? : கல்யாணி பிரியதர்ஷன் ஆச்சர்யம் | எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி | தலைப்பிற்காக அழையும் படக்குழு! | ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | வித்யாசாகர் மகனுக்கு ஜோடி யார் தெரியுமா? | ஜனவரி 23ல் திரைக்கு வருகிறதா சூர்யாவின் கருப்பு? | சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : மாளவிகா மோகனன் | சூர்யா 47வது படத்தில் மலையாள நட்சத்திர பட்டாளம் | இது பாகுபலி 3 இல்லை : ராஜமவுலி வெளியிட்ட தகவல் | ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் |

தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவர் மகேஷ்பாபு. தற்போது ராஜமவுலி இயக்கத்தில் பெயரிடப்படாத பிரம்மாண்டமான படத்தில் நடித்து வருகிறார். சினிமாவில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் விளம்பரப்படங்களிலும் நடித்து வருபவர் மகேஷ்பாபு.
அப்படி அவர் நடித்த ரியல் எஸ்டேட் நிறுவன விளம்பரப் படம் ஒன்றிற்காக அவர் பெற்ற சம்பளம் குறித்த விசாரணைக்கு அவரை நேரில் ஆஜராகச் சொல்லி அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றின் விளம்பரத்தில் நடித்த வகையில் மகேஷ்பாபு, 5.9 கோடி ரூபாய் சம்பளம் பெற்றாராம். அதில் 3.4 கோடியை செக் மூலமாகவும், 2.5 கோடியை பணமாகவும் பெற்றதாகத் தகவல். அந்த பணம் குறித்துத்தான் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளாராம்.
மகேஷ்பாபு விளம்பரப் படத்தில் நடித்த அந்த நிறுவனத்தை அமலாக்கத் துறை சமீபத்தில் சோதனை செய்துள்ளது. அதில் கிடைத்த கணக்குககளில் மகேஷ்பாபுவுக்கு தந்த தொகை விசாரணையில் சிக்கியிருக்கிறதாம்.