2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? | அக்கா, தங்கை, அம்மாவாக நடிப்பேன்: ரஜிஷா விஜயன் | அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் பதிவுடன் ஆரம்பம் | அன்றும்... இன்றும்... மணிகண்டனின் தன்னம்பிக்கைப் பதிவு | சினிமா வருமானம் போச்சு: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய சுரேஷ் கோபி முடிவு | மனநல தூதர் ஆனார் தீபிகா | திருத்தங்களுடன் வெளிவருகிறது 'அஞ்சான்' | எனக்கு படங்கள் இல்லையா? : மொய் விருந்தில் ஆவேசமான ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார், திரிஷா, பிரசன்னா, சுனில் உள்ளிட்டோர் நடித்த குட் பேட் அக்லி திரைப்படம் வருகிற ஏப்., 10-ந்தேதி வெளியாகிறது. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி வரும் நிலையில் தமிழகத்தில் முதல் காட்சி எப்போது போடப்படும் என்ற கருத்து நிலவுகிறது.
அதிகாலை காட்சிகள் இப்போது போடப்படாத நிலையில் தமிழகத்தில் இந்த திரைப்படம் காலை 9 மணி முதல் காட்சிகள் துவங்கப்படும் என்பதே திரையரங்க உரிமையாளர்களின் கருத்தாக நிலவுகிறது.
அது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை கிட்டத்தட்ட தமிழகம் முழுவதும் சுமார் 900 அரங்குகள் வரை வெளியாகும் என்ற தகவலும் கிடைத்துள்ளது. படத்தின் நீளம் 2 மணி நேரம் 20 நிமிடங்கள் என்பதால் இன்னொரு சிறப்பு காட்சி போடலாமா என்ற யோசனையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.