தீபாவளிக்கு வெளியாகும் 'கருப்பு' படத்தின் முதல் பாடல்! | கார்த்தி, விஜய் சேதுபதி போன்ற நடிகர்களால் தான் நல்ல கதை பெரிய படமாக வருகிறது! நலன் குமாரசாமி | சம்பளத்தை குறைத்து கொண்ட விக்ரம்! | ஹ்ரித்திக் ரோஷன் தயாரிப்பில் உருவாகும் புதிய வெப் தொடர் | அர்ஜுன் படத்தின் புதிய அப்டேட்! | 'சீன்'களை திருடும் இயக்குனர் | நான் ‛அப்புக்குட்டி' ஆனது இப்படித்தான் | ரசிகர்கள் 'இன்டலிஜென்ட்': சாய் பிரியா சர்டிபிகேட் | பிளாஷ்பேக்: ஒரு செல்லாத ரூபாயின் கதை தந்த யோசனை, என் எஸ் கிருஷ்ணனின் “பணம்” திரைப்படம் | தில்லானா மோகனாம்பாள், அவ்வை சண்முகி, ஜெயிலர் - ஞாயிறு திரைப்படங்கள் |
விடாமுயற்சி படத்தை அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள குட் பேட் அக்லி என்ற படத்தை நடித்துள்ளார் அஜித். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கிறார். கேங்ஸ்டர் கதையில் உருவாகி இருக்கும் இந்த படம் ஏப்ரல் பத்தாம் தேதி திரைக்கு வருகிறது. இந்த நேரத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் அளித்துள்ள ஒரு பேட்டியில், அடுத்த படமும் அஜித் உடன் அமைந்தால் மகிழ்ச்சியே, இதைவிட வேறு என்ன சந்தோஷம் இருக்க போகிறது என்று தெரிவித்திருக்கிறார்.
அதனால் கார் பந்தயம் முடிந்து அஜித் குமார் திரும்பியதும் அவர் நடிக்கும் அடுத்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே சிவா இயக்கத்தில் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என நான்கு படங்களில் நடித்த அஜித், வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு என மூன்று படங்களில் அடுத்தடுத்து நடித்தார். அதேப்போல் குட் பேட் அக்லி படத்தை அடுத்து மீண்டும் அவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது.