காலையில் தெலுங்கு முறைப்படி, மாலையில் கொடவா முறைப்படி…விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா திருமணம் | சிம்புவை வைத்து வரலாற்று படத்தை திட்டமிட்ட ராஜூ முருகன்! | சம்பளத்தை அதிரடியாக உயர்த்திய பிரதீப் ரங்கநாதன்! | திருமணத்தை நம்ப முடியவில்லை : அமலாபால் ஓபன் டாக் | ஜி.வி.பிரகாஷின் 'மென்டல் மனதில்' படத்தின் முதல் லிரிக்கல் வீடியோ வெளியானது! | சிவகார்த்திகேயன் அம்மாவாக ரம்யா நம்பீசன் | சினிமா இயக்குவதை மறந்துவிட்டேனா? நடிகர் சமுத்திரக்கனி பதில் | மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன பாரதிராஜா : வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார் | ரஜினிகாந்த், சிபி படத்தில் இணையும் பசில் ஜோசப், பிரியங்கா மோகன் | 'தாய் கிழவி' பார்த்துவிட்டு அக்கா ராதிகாவை கட்டிபிடித்து அழுதது ஏன்? நடிகை நிரோஷா |

அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா 2' படத்தின் பிரீமியர் காட்சியின் போது ஏற்பட்ட நெரிசலில் பெண் ஒருவர் மரணம் அடைந்தார். அவரது மகன் படுகாயமடைந்து உயிருக்குப் போராடி வருகிறார். அந்த விவகாரத்தில் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
சிறையில் ஒரு நாள் இருந்து வெளியில் வந்த அல்லு அர்ஜுனை தெலுங்குத் திரையுலகப் பிரபலங்கள் பலரும் சென்று சந்தித்தனர். கடந்த வாரம் தெலுங்கானா மாநில சட்டசபையில் பேசிய முதல்வர் ரேவந்த் ரெட்டி, அல்லு அர்ஜுனையும், தெலுங்கு சினிமா பிரபலங்களையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார். அன்று மாலையே பத்திரிகையாளர்களை சந்தித்த அல்லு அர்ஜுன், “பிரீமியர் காட்சியின் போது நடந்தது ஒரு விபத்து,” என்று பேசியிருந்தார்.
இதனிடையே, அல்லு அர்ஜுனை இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு ஹைதராபாத் காவல்துறை சம்மன் அனுப்பியது. இதனையடுத்து இன்று (டிச.,24) காலை 11 மணியளவில் அவர் ஆஜராகினார். அவரிடம் போலீசார் நான்கரை மணிநேரம் விசாரித்தனர். 50க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்பட்டதாகவும் அதற்கு அல்லு அர்ஜூன் பதிலளித்ததாகவும் கூறப்படுகிறது.
பவுன்சர்களை அனுப்பியவர் கைது
அல்லு அர்ஜூன், புஷ்பா 2 திரையிட்ட தியேட்டருக்கு வந்தபோது அவரது பாதுகாப்புக்கு பவுன்சர்களை அனுப்பியவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமும் விசாரிக்கின்றனர்.




