Advertisement

சிறப்புச்செய்திகள்

'காந்தி டாக்ஸ்' முதல் 'வித் லவ்' வரை... இந்த வார ஓடிடி வெளியீடுகள்.. | வருங்கால கணவருக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும்! மீனாட்சி சவுத்ரி வெளியிட்ட தகவல் | வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: 'துரந்தர்- 2' படத்தின் டிரைலர் நாளை வெளியாகிறது | ஜான்வி கபூரின் பிறந்தநாளில் வெளியிடப்பட்ட பெத்தி பட போஸ்டர்! | யோகி பாபுவின் 'கெணத்த காணோம்' படத்தின் டிரைலர் வெளியானது! | ரஜினி, கமல் இணையும் படம்: லதா ரஜினிகாந்த் சொன்ன தகவல் | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் 'கார்மேனி செல்வம்' புதிய ரிலீஸ் தேதி | மீண்டும் சிரஞ்சீவி படத்திற்கு இசையமைக்கும் தமன்! | என் போட்டோவை மார்பிங் செய்கின்றனர்!: ரச்சிதா ஆதங்கம் | ரொமான்டிக் திரில்லர் கதையில் உருவாகும் 'ஆசை' |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பத்திரிகையாளர் மீது தாக்குதல் : மோகன் பாபுவுக்கு ஜாமீன் மறுப்பு

21 டிச, 2024 - 02:58 IST
எழுத்தின் அளவு:
Attack-on-journalist-Mohan-Babu-denied-bail
Advertisement

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் மோகன் பாபுவுக்கும், அவரது மகன் மனோஜ் மஞ்சுவுக்கும் சொத்து தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டார்கள். இந்த தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதன் தொடர்ச்சியாக மோகன் பாபு வீட்டுக்குள் நுழைய முயன்ற மனோஜ் மஞ்சுவை பாதுகாவலர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை. இதை தொடர்ந்து கடும் கோபத்துடன் வீட்டுக்குள் இருந்து வெளியில் வந்த மோகன்பாபுவை அங்கு கூடியிருந்த பத்திரிகையாளர்கள் பேட்டி எடுக்க முயற்சித்தபோது அவர்களின் ஒருவரின் மைக்கை பிடுங்கி வீசி அடித்தார். இதனால் காயம் அடைந்த பத்திரிகையாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

இவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் மோகன் பாபு மீது வழங்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கில் கைது செய்யப்படலாம் என்கிற நிலையில் மோகன் பாபு தன்னை போலீசார் கைது செய்யாமல் இருக்க தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். ஜாமீன் வழங்கினால் மோகன்பாபு துபாய் சென்று விடுவார் என்று போலீஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் மோகன் பாபுவின் ஜாமீனை ஏற்க மறுத்து தள்ளுபடி செய்தது.

இதற்கிடையில் தன்னால் தாக்கப்பட்ட பத்திரிகையாளர்களை மருத்துவமனையில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார் மோகன்பாபு. பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு கணிசமான தொகை இழப்பீடு தர தயாராக இருப்பதாகவும், வழக்கை வாபஸ் பெறும்படியும் பத்திரிகையாளர் சங்கத்தை கேட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பிளாஷ்பேக் : தயாரிப்பாளரை டைட்டில் கார்டில் நக்கலடித்த கே.பாக்யராஜ்பிளாஷ்பேக் : தயாரிப்பாளரை டைட்டில் ... ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலனுக்கு இங்கிலாந்தின் உயரிய பட்டம் ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap