சிரஞ்சீவி மனைவி திரும்பத் திரும்ப கேட்கும் இளையராஜா - சிரஞ்சீவி பாடல் | தயாரிப்பாளரிடம் கெஞ்சிய நாயகி | வெற்றி இயக்குனருக்கு ஷாக் கொடுத்த நடிகர் | பிளாஷ்பேக்: எம்ஜிஆர் நடிக்க இருந்த கதையில் நடிகர் ரஜினிகாந்த் | அதிக சம்பளம் பெறும் நடிகர் கமல்ஹாசன்? | 'வொர்த், வொர்த், வொர்த்' - பார்த்திபனின் மகளிர் தின வாழ்த்து | 'காந்தாரா' நடிகைக்கு ஆதரவாக குரல் கொடுத்த சிவராஜ்குமார் | 'உஸ்தாத் பகத்சிங்' படத்திற்கு சம்பளத்தை கணிசமாக குறைத்த பவன் கல்யாண் | நம் நாடு, நாடோடிகள், அமரன் - ஞாயிறு திரைப்படங்கள் | ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி |

ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சமீபத்தில் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடித்து திரைக்கு வந்த படம் 'அமரன்'. தமிழகத்தை சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை தழுவி இப்படம் எடுக்கப்பட்டு இருந்தது. விமர்சகர்கள், ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களைப் பெற்று வசூலில் சாதனையை படைத்து வருகிறது.
இதைத்தொடர்ந்து இந்த படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி அடுத்து ஹிந்தியில் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இதனை பாலிவுட் நடிகர் அமீர் கானின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கின்றனர். இதில் சாய் பல்லவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.




