தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

திரைப்படத்தின் உயரிய விருதான ஆஸ்கர் விருது வழங்கும், அகாடமி ஆப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் அமைப்பு ஆண்டுதோறும் மாணவர்களுக்கான ஆஸ்கர் விருது போட்டியையும் நடத்துகிறது. வளர்ந்து வரும் இளம் திரைப்பட கலைஞர்களை ஊக்குவிப்பதற்காக இதனை நடத்துகிறது.
இந்த ஆண்டுக்காக போட்டி லாஸ் ஏஞ்சல்சில் நடந்தது. உலகம் முழுவதிலும் இருந்து 738 கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இருந்து 2,683 படங்கள் பங்கேற்றன. இதில் 15 மாணவர்கள் தயாரித்து, இயக்கிய ஆவணப் படம் மற்றும் குறும்படங்கள் சிறந்ததாக தேர்வாகின. இதில் இந்திய மாணவர்கள் 2 பேர் இடம்பெற்று சாதனை படைத்துள்ளனர்.
நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற இந்திய மாணவர் ரிஷப் ராஜ் ஜெயின், 'எ ட்ரீம் கால்ட் குஷிக்' என்ற தலைப்பில் தயாரித்த ஆவணப்படத்திற்கு மாணவர் ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. வங்கதேசத்தில் உள்ள 'ரோஹிங்கியாக' அகதியின் கதையை சொல்லும் ஆவணப்படம் இது. ஆமதாபாத்தில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன் அகாடமியை சேர்ந்த பிலிம் டிசைன் மாணவர் அக்ஷித் குமார் தான் இயக்கிய குறும்படம் ஒன்றுக்காக விருது பெற்றார்.