கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
தமிழ், தெலுங்கு, மலையாளம் என சில வருடங்களுக்கு முன்பு வரை பிஸியான நடிகையாக வலம் வந்தவர் நடிகை அமலா பால். இயக்குனர் விஜய்யுடனான திருமணம், அதன் பிறகு கருத்து வேறுபாடு ஏற்பட்டு திருமண முறிவு என பரபரப்பான நிகழ்வுகளுக்கு பிறகு சினிமாவை விட்டு சற்றே ஒதுங்கி இருந்தார் அமலா பால். பின்னர் தனது காதலரான ஜெகத் தேசாய் என்பவரை கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார் அமலாபால். மகனுக்கு இலை என்று பெயர் சூட்டியுள்ளதை அப்போதே அறிவித்த அமலாபால், இப்போது ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தில் முதல் முறையாக தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். கணவருடன் மிக நெருக்கமாக முத்தமிட்டபடி தனது மகனையும் கையில் வைத்தபடி அமலாபால் அமர்ந்திருக்கும் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.