நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் | பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: இவர் இசையமைப்பாளர் கீரவாணியின் தந்தை | அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? |
வேட்டையன் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ‛கூலி' படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லோகேஷ் கனகராஜை பொறுத்தவரை படத்திற்கு படம் புதுப்புது காம்பினேஷன்களில் நட்சத்திர பட்டாளங்களை தன்னுடன் இணைத்துக் கொள்வார். அந்த வகையில் இந்த படத்தில் கிட்டத்தட்ட 35 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் சத்யராஜ் இணைந்து நடிக்கிறார். அதுமட்டுமல்ல நடிகை ஷோபனாவும் நீண்ட நாட்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக இந்த படத்திற்காக ரஜினிகாந்த் உடன் இணைந்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது கன்னட நடிகர் உபேந்திராவும் கூலி படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக இணைந்துள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இருந்து இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும் ரஜினிகாந்த் உடன் தான் இணைந்து நடிக்கும் விஷயத்தை ஆர்வம் மிகுதியால் அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு தெரியப்படுத்தியுள்ளார் நடிகர் உபேந்திரா.
அதே சமயம் இந்த பதிவை சில நிமிடங்களிலேயே அவர் நீக்கியும் விட்டார். ஆனாலும் அவரது இந்த பதிவு வைரலாக பரவி வருகிறது. கன்னடத்தில் பிரபல இயக்குனர், நடிகர் என பவனி வரும் உபேந்திரா கடந்த 2008ல் தமிழில் விஷால் நடிப்பில் வெளியான சத்யம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு 16 வருடங்கள் கழித்து மீண்டும் கூலி படத்தில் நடிப்பதன் மூலம் தமிழில் நுழைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.