2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் ‛விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். அவருடன் த்ரிஷா, அர்ஜூன், ஆரவ் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இதன் கடைசிக்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்து வருகிறது. அஜித்தும் படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வந்தார். நேற்று திடீரென அஜித் சென்னை திரும்பினார். எதற்காக அவர் சென்னை வந்தார், படப்பிடிப்பு முடிந்துவிட்டதா, இல்லை மீண்டும் படப்பிடிப்பு நின்றதா என பல கேள்விகள் எழுந்தன.
இந்நிலையில் அஜித் சென்னை திரும்பியதன் காரணம் தெரிய வந்துள்ளது. அஜித்தின் மனைவி ஷாலினிக்கு சிறிய அளவிலான ஆபரேஷன் நடந்துள்ளது. அதற்காகவே அவர் சென்னை திரும்பி உள்ளார். இன்று(ஜூலை 3) காலை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இந்த ஆபரேஷன் நடந்துள்ளது. ஷாலினி உடன் மருத்துவமனையில் அஜித் இருக்கும் போட்டோ வலைதளங்களில் வைரலானது.
எதற்காக ஷாலினிக்கு ஆபரேஷன் நடந்தது என்ற விபரம் வெளியாகவில்லை.