ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் பிஸியாக நடித்துக் கொண்டிருப்பவர் வரலட்சுமி சரத்குமார். அவருக்கும் மும்பையைச் சேர்ந்த நிக்கோலய் சச்தேவ் என்பவருக்கும் காதல் மலர்ந்தது. இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த மார்ச் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
சமீபத்தில் சென்னையில் உள்ள அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் ஆகியோருக்கு தன் குடும்பத்தாருடன் சென்று திருமண அழைப்பிதழ் தந்தார் வரலட்சுமி. அடுத்து ஐதராபாத் சென்று அங்குள்ள பிரபலங்களுக்கும் அழைப்பிதழ் கொடுத்தார்.
ஜூலை 2ம் தேதி வரலட்சுமி, நிக்கோலய் திருமணம் தாய்லந்து நாட்டில் நடக்க உள்ளதாகத் தகவல் வெளியானது. திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே பங்கேற்க உள்ளார்களாம். அதற்கடுத்து ஜூலை 3ம் தேதி சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றில் திருமண வரவேற்பு நடத்தத் திட்டமிட்டுள்ளார்களாம்.
திருமணத்திற்குப் பிறகும் வரலட்சுமி சினிமாவில் தொடர்ந்து நடிக்க உள்ளார்.