‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
கூழாங்கல் படத்தை இயக்கிய பி.எஸ்.வினோத் ராஜ் தற்போது இயக்கியிருக்கும் படம் கொட்டுக்காளி. சூரி நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் கடந்த ஆண்டு வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதையடுத்து இறுதிக்கட்டப் பணிகள் முடிவடைந்து தற்போது படம் ரிலீசுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. அதோடு சர்வதேச திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டு வருகிறது.
74வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழா பிப்ரவரி 15 முதல் 25 வரை ஜெர்மனியில் நடைபெற்றது. அப்போது கொட்டுக்காளி படம் திரையிடப்பட்டு அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது. படத்தை பார்த்த பலரும் படக்குழுவினரை பாராட்டினர். இதுதொடர்பான வீடியோவை பதிவிட்டிருக்கும் இப்படத்தின் தயாரிப்பாளரான நடிகர் சிவகார்த்திகேயன், ‛‛பெர்லினாலேயில் எங்கள் கொட்டுக்காளியின் முதல் சர்வதேச அரங்கிற்கு நன்றி. மேலும், நம்ப முடியாத சில பதில் எங்கள் இதயங்களில் ஒரு நீடித்த முத்திரையை பதித்துள்ளது. மறக்க முடியாத தருணங்களுக்கு நன்றி'' என அவர் பதிவிட்டுள்ளார்.