எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
ரமேஷ் இயக்கத்தில் அசோக் செல்வன் நடிப்பில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி, வரவேற்பை பெற்ற படம் தெகிடி. ஜனனி நாயகியாக நடித்த இந்த படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்திருந்தார். இப்படம் திரைக்கு வந்து பத்து ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து தெகிடி படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகிறது என்று சோசியல் மீடியாவில் ஒரு அப்டேட் கொடுத்திருக்கிறார் அசோக் செல்வன். அதனால் தெகிடி இரண்டாம் பாகத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்பது தெரியவந்துள்ளது. முதல்பாகத்தில் பணியாற்றியவர்களே இரண்டாம் பாகத்திலும் தொடருவார்கள் என கூறப்படுகிறது. அசோக் செல்வன் நடிப்பில் வெளியான போர் தொழில், சபாநாயகன், ப்ளூ ஸ்டார் போன்ற படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வந்து குறிப்பிடத்தக்க வரவேற்பை பெற்றன.