ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
ரமேஷ் இயக்கத்தில் அசோக் செல்வன் நடிப்பில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி, வரவேற்பை பெற்ற படம் தெகிடி. ஜனனி நாயகியாக நடித்த இந்த படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்திருந்தார். இப்படம் திரைக்கு வந்து பத்து ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து தெகிடி படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகிறது என்று சோசியல் மீடியாவில் ஒரு அப்டேட் கொடுத்திருக்கிறார் அசோக் செல்வன். அதனால் தெகிடி இரண்டாம் பாகத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்பது தெரியவந்துள்ளது. முதல்பாகத்தில் பணியாற்றியவர்களே இரண்டாம் பாகத்திலும் தொடருவார்கள் என கூறப்படுகிறது. அசோக் செல்வன் நடிப்பில் வெளியான போர் தொழில், சபாநாயகன், ப்ளூ ஸ்டார் போன்ற படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வந்து குறிப்பிடத்தக்க வரவேற்பை பெற்றன.