மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
தமிழில் தடையறத் தாக்க, தீரன் அதிகாரம் ஒன்று, என்ஜிகே உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ரகுல் பிரீத் சிங். தற்போது அயலான், இந்தியன்-2 போன்ற படங்களில் அவர் நடித்திருக்கிறார். மேலும் பாலிவுட் சினிமாவில் பல படங்களை தயாரித்தவரும், நடிகருமான ஜாக்கி பக்னானி என்பவரை பல ஆண்டுகளாக காதலித்து வரும் ராகுல் பிரீத் சிங், 2024 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியாகி வந்தன.
இந்த நிலையில் தற்போது வருகிற பிப்ரவரி 22ஆம் தேதி கோவாவில் ராகுல் ப்ரீத் சிங், ஜாக்கி பக்னானி ஆகியோரின் திருமணம் நடைபெற இருப்பதாக பாலிவுட்டில் ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாக உள்ளது. ஜாக்கி பக்னானி, த்ரிஷா கதையின் நாயகியாக நடித்து வெளியான மோகினி என்ற படத்தில் சந்தீப் என்ற ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.