மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவர். விரைவில் அவர் அரசியல் கட்சி தொடங்க உள்ளதால் அவ்வப்போது நலத்திட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார். மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்தது, ஒவ்வொரு தொகுதிகளிலும் நூலகம் போன்றவற்றை அமைத்தார். சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது அவரது மக்கள் இயக்கத்தினர் களத்தில் இறங்கி உதவினர்.
தற்போது தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்தில் பெய்த மழை வெள்ளத்தால் மக்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் இன்று(டிச., 30) சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் வந்தார். விஜய் பின்னர் நெல்லையில் உள்ள மாதா மாளிகையில் 1500 குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
1500 குடும்பத்தினருக்கும் அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் புதிய உடைகளை அவர் வழங்கினார். மேலும் மழை வெள்ளத்தால் உயிரிழந்த குடும்பத்தினர் சிலருக்கு நிதி உதவியும் அளித்தார்.