கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் | தீபாவளி புக்கிங் ஆரம்பம்: மழையால் மிரளும் திரையுலகம் | மக்கள் திட்டாதது நம்பிக்கையை கொடுத்தது: ஹரிஷ் கல்யாண் | விக்ரம் உடன் முதல்முறையாக இணையும் அனிருத் | ஹிந்தியில் ரீ-மேக் ஆகும் ‛சங்கராந்திகி வஸ்துனம்' : அக் ஷய் நடிக்க வாய்ப்பு |
நடிகர் விஜய் சேதுபதி தெலுங்கில் வில்லனாக நடித்த படம் உப்பென்னா. இந்த படத்தில் அவரது மகளாக கீர்த்தி ஷெட்டி நடித்திருந்தார். இந்த நிலையில் அதன் பிறகு தமிழில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்க கமிட்டான ஒரு படத்தில் கிர்த்தி ஷெட்டியை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்தபோது அதற்கு அவர் தடை போட்டார். இதுபற்றி தான் அளித்துள்ள ஒரு பேட்டியில், அது குறித்து ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார் விஜய் சேதுபதி.
அவர் கூறுகையில், ‛‛உப்பென்னா தெலுங்கு படத்தில் கிர்த்தி ஷெட்டிக்கு தந்தையாக நடித்திருந்தேன். அது ஒரு மிகப்பெரிய வெற்றி படம். மகளாக நடித்த அவருடன் நான் ரொமான்ஸ் செய்து நடிக்க விரும்பவில்லை. அதனால் தான் அவரை தவிர்த்து விட்டு வேறு நடிகையை ஒப்பந்தம் செய்யுமாறு கூறினேன்'' என தெரிவித்துள்ளார் விஜய் சேதுபதி.