24 ஆண்டுகளுக்கு பின் தமிழில் ரவீனா டாண்டன் | முன்னாள் மனைவியிடம் மன்னிப்பு கேட்ட ஏஆர் ரஹ்மான் | நான் நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண் : பாடகி கெனிஷா பதிவு | வதந்தி 2 வெப்சீரிஸின் படப்பிடிப்பு எப்போது? | ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! |
நடிகர் விஜய் சேதுபதி தெலுங்கில் வில்லனாக நடித்த படம் உப்பென்னா. இந்த படத்தில் அவரது மகளாக கீர்த்தி ஷெட்டி நடித்திருந்தார். இந்த நிலையில் அதன் பிறகு தமிழில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்க கமிட்டான ஒரு படத்தில் கிர்த்தி ஷெட்டியை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்தபோது அதற்கு அவர் தடை போட்டார். இதுபற்றி தான் அளித்துள்ள ஒரு பேட்டியில், அது குறித்து ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார் விஜய் சேதுபதி.
அவர் கூறுகையில், ‛‛உப்பென்னா தெலுங்கு படத்தில் கிர்த்தி ஷெட்டிக்கு தந்தையாக நடித்திருந்தேன். அது ஒரு மிகப்பெரிய வெற்றி படம். மகளாக நடித்த அவருடன் நான் ரொமான்ஸ் செய்து நடிக்க விரும்பவில்லை. அதனால் தான் அவரை தவிர்த்து விட்டு வேறு நடிகையை ஒப்பந்தம் செய்யுமாறு கூறினேன்'' என தெரிவித்துள்ளார் விஜய் சேதுபதி.