மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

கொரோனா தாக்கம் வந்த பிறகு ஒரு மொழியில் தயாராகும் மற்ற படங்கள் மற்ற மொழிகளிலும் வரவேற்பைப் பெறுவது அதிகமாகிவிட்டது. தெலுங்கில் தயாரான 'ஆர்ஆர்ஆர்', கன்னடத்தில் தயாரான 'கேஜிஎப், காந்தாரா' ஆகிய படங்கள் மற்ற மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி நல்ல வசூலைப் பெற்றது.
அந்த வரிசையில் தமிழ்ப் படங்கள் மட்டும் இடம் பெறாமல் இருந்தது. 'பொன்னியின் செல்வன்' படம் அப்படிப்பட்ட ஒரு சாதனையைப் படைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மற்ற மொழிகளில் அந்தப் படத்தின் இரண்டு பாகங்களையும் ரசிகர்கள் கண்டு கொள்ளவே இல்லை. அந்த வருத்தத்தைத் தற்போது 'ஜெயிலர்' படம் போக்கியுள்ளது.
தெலுங்கில் சுமார் 12 கோடிக்கு விற்பனையான 'ஜெயிலர்' படம் பங்குத் தொகையாக மட்டும் 42 கோடியைத் தந்து 30 கோடி ரூபாய் லாபத்தைத் தந்துள்ளது. வரும் நாட்களிலும் படம் கூடுதல் லாபத்தைத் தரும் என்கிறார்கள்.
இதற்கு முன்பு கன்னடப் படமான 'காந்தாரா' படம் 27 கோடி ரூபாய் லாபத்தைத் தந்ததே சாதனையாக இருந்தது. அதை தற்போது 'ஜெயிலர்' முறியடித்துள்ளது.




