Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிறமொழி நடிகர்களை புறக்கணிக்கவில்லை : பவன் கல்யாணுக்கு நாசர் பதில்

28 ஜூலை, 2023 - 13:56 IST
எழுத்தின் அளவு:
Actor-Nassar-reply-to-Pawankalyan

முன்னணி தெலுங்கு நடிகர் பவன் கல்யாண். தனது நடிப்பில் உருவாகி உள்ள 'புரோ' படத்தின் புரமோசன் நிகழ்வுகளில் கலந்து கொண்டு வருகிறார். இந்த படத்தை சமுத்திரகனி இயக்கி உள்ளார். பிரமோசன் நிகழ்வொன்றில் பேசிய பவன் கல்யாண் "தமிழ் சினிமாவில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் மட்டுமே வேலை பார்க்க வேண்டும் என புதிய விதி கொண்டு வந்துள்ளனர். குறுகிய மனநிலையுடன் இல்லாமல் பெரிதாக யோசித்தால் தமிழ் சினிமா 'ஆர்ஆர்ஆர்' போன்ற சர்வதேச படத்தை கொடுக்க முடியும். இன்று தெலுங்கு திரையுலகம் இந்த அளவு வளர்ச்சியை கண்டதற்கு காரணம், இங்கு அனைத்து மொழியை சேர்ந்தவர்களும் பணியாற்றுகிறார்கள். உதாரணத்துக்கு சமுத்திரகனி தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்றாலும் அவர் தெலுங்கு படங்களை இயக்குகிறார், அதேபோல் ஏ.எம் ரத்தினம் ஆந்திராவை சேர்ந்தவராக இருந்தாலும் அவர் தமிழில் ஏராளமான படங்களை தயாரித்து இருக்கிறார். ஆதலால் இந்த முடிவை கைவிட வேண்டும்" என்றார்.

இதற்கு பதிலளித்து தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது: பிற மொழி நடிகர்கள், தமிழ் படங்களில் பணியாற்ற முடியாது என்கிற தகவல் பரவி வருகிறது. இது முற்றிலும் தவறானது. இதுபோன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டால், அதற்கு முதல் ஆளாக நான் தான் எதிர்ப்பு தெரிவித்திருப்பேன்.

இப்போது நாம் பான் இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் படங்களை எடுத்துக் கொண்டிருக்கிறோம். அதனால் பிறமொழியை சேர்ந்த நடிகர், நடிகைகளும் இங்கு நடிக்க வேண்டிய சூழல் உள்ளது. இந்த மாதிரி நிலையில், யாரும் பிறமொழி நடிகர்கள், தமிழ் படங்களில் பணியாற்றகூடாது என்கிற தீர்மானத்தை போட மாட்டார்கள்.

தமிழ் திரைப்படங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் நலனை கருதி, தமிழ்நாட்டுக்குள் படங்களை எடுக்க வேண்டும், தமிழ் திரைப்பட தொழிலாளர்களை பயன்படுத்த வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் இங்கு சினிமாவை நம்பி உள்ள தொழிலாளர்களின் நலன் கருதி எடுகப்பட்டுள்ளதே தவிர, மற்றபடி தமிழ் படங்களில் தமிழ் நடிகர்கள்தான் நடிக்க வேண்டும் என்று யாரும் சொல்லவில்லை.

பிற மொழிகளில் உள்ள திறமைகளை கண்டறிந்து அவர்களுக்கு வாய்ப்பு வழங்கும் பெருமைமிக ஒரு திரையுலகம் தான் தமிழ் சினிமா. வந்தாரை வாழ வைக்கும் ஊர் இது. சாவித்ரி, வாணி ஜெயராம் என ஏராளமானோர் இங்கு வந்து பிரபலமாகி இருகின்றனர். இந்த தவறான தகவலை சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம். ஒன்றாக படங்களை எடுப்போம் அதை உலக அளவுக்கு கொண்டு செல்வோம்.

இவ்வாறு நாசர் அந்த வீடியோவில் பேசி உள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
வீடு, நகைகளை அடகு வைத்து படம் எடுத்துள்ளேன் : மலையாள 'ஜெயிலர்' பட இயக்குனர் கண்ணீர்வீடு, நகைகளை அடகு வைத்து படம் ... சமந்தாவுடன் குரங்கு எடுத்துக் கொண்ட ஜாலி செல்பி சமந்தாவுடன் குரங்கு எடுத்துக் கொண்ட ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in