'காந்தி டாக்ஸ்' முதல் 'வித் லவ்' வரை... இந்த வார ஓடிடி வெளியீடுகள்.. | வருங்கால கணவருக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும்! மீனாட்சி சவுத்ரி வெளியிட்ட தகவல் | வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: 'துரந்தர்- 2' படத்தின் டிரைலர் நாளை வெளியாகிறது | ஜான்வி கபூரின் பிறந்தநாளில் வெளியிடப்பட்ட பெத்தி பட போஸ்டர்! | யோகி பாபுவின் 'கெணத்த காணோம்' படத்தின் டிரைலர் வெளியானது! | ரஜினி, கமல் இணையும் படம்: லதா ரஜினிகாந்த் சொன்ன தகவல் | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் 'கார்மேனி செல்வம்' புதிய ரிலீஸ் தேதி | மீண்டும் சிரஞ்சீவி படத்திற்கு இசையமைக்கும் தமன்! | என் போட்டோவை மார்பிங் செய்கின்றனர்!: ரச்சிதா ஆதங்கம் | ரொமான்டிக் திரில்லர் கதையில் உருவாகும் 'ஆசை' |

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி, வடிவேலு, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் திரைக்கு வந்துள்ள படம் மாமன்னன். இந்த படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு பெற்று வரும் நிலையில், படக்குழு கேக் வெட்டி வெற்றியை கொண்டாடி உள்ளது. மேலும் இப்படத்தின் நாயகனும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் இயக்குனர் மாரி செல்வராஜுக்கு ஒரு மினி கூப்பர் காரை பரிசாக வழங்கினார்.
இந்த நிலையில் மாமன்னன் படத்தில் இடம்பெற்றுள்ள நெஞ்சமே நெஞ்சமே என்ற பாடல் குறித்து இயக்குனர் செல்வராகவன்ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், தமிழில் இப்படி ஒரு பாடல் கேட்டு எவ்வளவு நாள் ஆயிற்று. தலைவா, நாடி நரம்புக்குள் புகுந்து மயக்கம் அதிசயம் இது என்று பதிவிட்டு அதை ஏ. ஆர். ரஹ்மானுக்கும் டேக் செய்துள்ளார். இந்தப் பாடலை விஜய் யேசுதாஸ் பின்னணி பாட, யுகபாரதி எழுதியுள்ளார் . அதேபோல் இந்த படத்தில் வடிவேலு பாடிய ராசா கண்ணு என்ற பாடலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.




