ஹாட்ரிக் வெற்றி : மகிழ்ச்சியில் சிம்ரன் | ஜெயிலர் 2வில் யோகிபாபு | என்னை கொல்ல சதி நடக்குது: ஜாக்குவார் தங்கம் அலறல் | இடியாப்ப சிக்கலில் விஜயகாந்த் மகன் திரைப்படம் | நயன்தாராவுடன் இணையும் படத்திற்காக போட்டோஷூட் நடத்திய சிரஞ்சீவி! | தனுஷின் 'குபேரா' படத்தை 50 கோடிக்கு கைப்பற்றிய அமேசான் பிரைம்! | நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் சூர்யாவின் 'ரெட்ரோ' | 'கொம்பு சீவி' படத்திற்காக மதுரை வட்டார தமிழில் டப்பிங் பேசும் சண்முக பாண்டியன்! | விஜய்சேதுபதி நடித்துள்ள 'ஏஸ்' படத்தின் சென்சார் - ரன்னிங் டைம் வெளியானது! | ரவி மோகனிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கும் ஆர்த்தி ரவி |
தெலுங்குத் திரையுலகத்தில் கடந்த ஓரிரு வருடங்களாக பரபரப்பை ஏற்படுத்தியவர்கள் நரேஷ் - பவித்ரா. மறைந்த நடிகர் கிருஷ்ணா மனைவியின் மகனும், முன்னணி நடிகரான மகேஷ் பாபுவின் அண்ணனுமான நரேஷ் இதற்கு முன்பு மூன்று திருமணங்களைச் செய்தவர். அவர் கன்னடத்திலிருந்து தெலுங்கில் நடிக்க வந்த அம்மா வேட நடிகை பவித்ராவைக் காதலிப்பதாக செய்திகள் பரவியது. நரேஷின் மூன்றாவது மனைவி செய்த தகராறால் நரேஷ் - பவித்ரா காதல் உண்மை என்று வெளிச்சத்திற்கு வந்தது.
நரேஷ், பவித்ரா இருவரும் அவர்களது சொந்த வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள 'மல்லி பெல்லி' என்ற படத்தில் நடித்துள்ளார்கள். அந்தப் படத்தின் புரமோஷன் என சில வீடியோக்களும் வெளிவந்தது. அது அவர்களது சொந்த வாழ்க்கையைப் போல இருந்ததால் அதையும் உண்மை என்று நம்பி பலரும் செய்திகளை வெளியிட்டார்கள். அப்படம் நேற்று தெலுங்கில் வெளியாகிள்ளது. படத்தைப் பார்த்தபின்புதான் அவர்களது சொந்தக் கதையையே சில மாற்றங்களுடன் படமாக்கியிருக்கிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.
படத்தின் இயக்குனரான எம்எஸ் ராஜு, நரேஷ் கொடுத்த பல விஷயங்களுடன் சேர்த்து படத்தை உருவாக்கியிருக்கிறாராம். நரேஷின் மூன்றாவது மனைவியாக வனிதா விஜயகுமார் நடித்துளளாராம். படத்திற்கு விமர்சனங்கள் பாசிட்டிவ்வாக இல்லை என்றாலும் நரேஷ் - பவித்ரா காதல் சர்ச்சையை வைத்தே படத்தை ஓட்டிவிடலாம் என நினைக்கிறார்களாம்.