தென்தமிழகத்து இளைஞர்களின் கதை 'பைசன்': இயக்குனர் மாரி செல்வராஜ் | ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் | மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு | கேரளாவை தொடர்ந்து ஹிந்தியிலும் சென்சார் போர்டு சிக்கலில் ஜானகி டைட்டில் | தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்! | என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் |
ஆர்.ஆர்.ஆர் படத்தை அடுத்து தற்போது மகேஷ் பாபு நாயகனாக நடிக்க இருக்கும் படத்தை இயக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளார் ராஜமவுலி. இந்த நிலையில் மஹேந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா தன்னுடைய டுவிட்டரில் சிந்து சமவெளி நாகரிகம் பற்றிய புகைப்படங்களை பதிவிட்டு, வரலாற்றை உயிர்ப்பிக்கும் மற்றும் கற்பனையை தூண்டும் அற்புதமான எடுத்துக்காட்டுகள் இவை என்று குறிப்பிட்டு இருப்பவர், இது போன்ற பழங்கால நாகரிகத்தைப் பற்றி இயக்குனர் ராஜமவுலி படம் எடுத்தால் உலக அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்து வகையில் இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.
இதற்கு ராஜமவுலி அவருக்கு ஒரு பதில் கொடுத்துள்ளார். அந்த பதிவில், தோலாவிராயில் மகதீரா படத்தின் படப்பிடிப்புக்கு சென்ற போது பழமையான ஒரு மரத்தை பார்த்தேன். அது சிதைந்து போய் இருந்தது. அப்போது சிந்து சமவெளி நாகரிகத்தின் எழுச்சி மற்றும் வீழ்ச்சியை அந்த மரத்தின் மூலம் விவரிக்கும் படியான ஒரு படத்தை எடுக்க நினைத்தேன். அதன் பிறகு பாகிஸ்தானுக்கு சென்ற போது மொகஞ்சதாரோவிற்கு செல்ல மிகவும் முயற்சி எடுத்தேன். ஆனால் அனுமதி கிடைக்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார் ராஜமவுலி.
அதோடு கடந்த 2018ம் ஆண்டு கராச்சியில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்வதற்காக தான் பாகிஸ்தான் சென்றபோது, அங்குள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்களை சுற்றி பார்த்தபோது எடுத்த புகைப்படங்களையும் பதிவிட்டு அது குறித்த சில ஆச்சரிய தகவல்களையும் அவர் பகிர்ந்து இருக்கிறார்.