7ஜி ரெயின்போ காலனி 2 அப்டேட் சொன்ன செல்வராகவன் | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் வெளியானது! | விருது மாற்றி கிடைத்ததில் கொஞ்சம் வருத்தம் தான் : மஞ்சும்மல் பாய்ஸ் இசையமைப்பாளர் | நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்த மாதுரி தீக்ஷித் : கோபத்தில் வெளியேறிய ரசிகர்கள் | கேரள அரசு குழந்தை நட்சத்திர விருதுகள் மிஸ்ஸிங் : கிளம்பியது சர்ச்சை | ஆர்யன் பட கிளைமாக்ஸ் மாற்றம் : ஹீரோ விஷ்ணு விஷால் அறிவிப்பு | சாய் அபயங்கரை வாழ்த்திய அல்லு அர்ஜுன்! | வேகம் எடுக்கும் விஜய்யின் 'ஜனநாயகன்' படக்குழு! இம்மாதம் முதல் பாடல் வெளியாகிறது! | அஜித் 64வது படத்தில் நடிக்க விஜய்சேதுபதி, லாரன்ஸிடம் பேச்சுவார்த்தை! | டிரெயின் பட ரிலீசில் அதிரடி முடிவு எடுத்த தாணு |

‛ஆர். ஆர். ஆர்' படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலி அடுத்து நடிகர் மகேஷ் பாபுவின் 29வது படத்தை இயக்கவுள்ளார். கடந்த வருடத்தில் இருந்து இதற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வந்தது. தற்போது முன் தயாரிப்பு பணிகள் முடிவடைந்து விரைவில் படப்பிடிப்பிற்கு தயாராகி வருகின்றனர்.
ஏற்கனவே இந்த படத்தில் மகேஷ் பாபு உடன் பிரித்விராஜ் மற்றும் கதாநாயகியாக நடிக்க பிரியங்கா சோப்ரா இணைந்துள்ளனர். சமீபத்தில் இதற்கான டெஸ்ட் லுக் படப்பிடிப்பிற்காக பிரியங்கா சோப்ரா ஹைதராபாத்திற்கு கடந்த வாரத்தில் வந்திருந்தார். அப்போது அவரின் சம்பளம் தொகை குறித்து பேச்சுவார்த்தை நடந்துள்ளது. பிரியங்கா சோப்ரா, பாலிவுட் மற்றும் சில ஆங்கில படங்களில் நடித்துள்ளதால் வெளிநாடுகளிலும் அவர் புகழ்பெற்ற நடிகை என்பதால் அவர் ரூ. 30 கோடி சம்பள தொகை கேட்டுள்ளார். இதனை தயாரிப்பு நிறுவனமும் கொடுக்க முன்வந்துள்ளதாக தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.