கதாசிரியர் ஆன தமன் | பிளாஷ்பேக் : தமிழில் ஹீரோவாக நடித்த விஷ்ணுவர்தன் | பிளாஷ்பேக் : சிவாஜி பட தலைப்பில் நடித்த எம்.ஜி.ஆர் | குறுக்கு வழியில் முன்னேறும்போது 4 வருடம் போராடி ஜெயித்துள்ளேன் : புதுமுக நடிகை அதிரடி | ஹரிஹர வீரமல்லு - எந்த 'கட்'டும் இல்லாமல் ‛யு/ஏ' சான்று | ‛புதிய பயணம்...' : ரஜினியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற கமல்ஹாசன் | ‛இந்தியன் 3' : மீண்டும் உருவாக ரஜினிகாந்த் தலையீடு | ஜெனிலியா எதிர்பார்க்கும் வேடம்... : மீண்டும் தமிழில் நடிக்க வருவாரா? | சினிமா டிக்கெட் கட்டணம் : கர்நாடகாவில் புதிய அறிவிப்பு | ஒரு பாடலுக்கு நடனமாடிய முன்னணி கதாநாயகிகள் : யார் நடனம் அசத்தல்? |
‛ஆர். ஆர். ஆர்' படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலி அடுத்து நடிகர் மகேஷ் பாபுவின் 29வது படத்தை இயக்கவுள்ளார். கடந்த வருடத்தில் இருந்து இதற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வந்தது. தற்போது முன் தயாரிப்பு பணிகள் முடிவடைந்து விரைவில் படப்பிடிப்பிற்கு தயாராகி வருகின்றனர்.
ஏற்கனவே இந்த படத்தில் மகேஷ் பாபு உடன் பிரித்விராஜ் மற்றும் கதாநாயகியாக நடிக்க பிரியங்கா சோப்ரா இணைந்துள்ளனர். சமீபத்தில் இதற்கான டெஸ்ட் லுக் படப்பிடிப்பிற்காக பிரியங்கா சோப்ரா ஹைதராபாத்திற்கு கடந்த வாரத்தில் வந்திருந்தார். அப்போது அவரின் சம்பளம் தொகை குறித்து பேச்சுவார்த்தை நடந்துள்ளது. பிரியங்கா சோப்ரா, பாலிவுட் மற்றும் சில ஆங்கில படங்களில் நடித்துள்ளதால் வெளிநாடுகளிலும் அவர் புகழ்பெற்ற நடிகை என்பதால் அவர் ரூ. 30 கோடி சம்பள தொகை கேட்டுள்ளார். இதனை தயாரிப்பு நிறுவனமும் கொடுக்க முன்வந்துள்ளதாக தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.