ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
குஷ்பு, நயன்தாரா உள்பட பல நடிகைகளுக்கு ரசிகர்கள் கோயில் கட்டி இருக்கிறார்கள். அந்த வரிசையில் தற்போது சமந்தாவுக்கும் ஆந்திராவைச் சேர்ந்த சந்தீப் என்ற ரசிகர் ஒருவர் தனது வீட்டிலேயே ஒரு கோயில் கட்டி இருக்கிறார். அந்த கோயிலில் சமந்தாவின் சிலையை வைத்திருக்கிறார். இந்த கோவில் ஏப்ரல் 28ம் தேதியான நாளை திறக்கப்பட இருப்பதாக ஒரு செய்தியை அந்த ரசிகர் வெளியிட்டு இருக்கிறார். சமந்தாவுக்காக அவர் உருவாக்கி உள்ள அந்த சிலையானது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும் நடிகை சமந்தா, பிரதியுஷா என்ற ஒரு அமைப்பை தொடங்கி அதன் மூலம் தொடர்ந்து சமூக சேவைகளை செய்து வருகிறார். அதற்கு அவருக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் இந்த கோயிலை தான் கட்டி உள்ளதாகவும், இதுவரை தான் சமந்தாவை நேரில் சந்தித்ததில்லை என்றும் அந்த ரசிகர் கூறியுள்ளார்.