நாக சைதன்யாவின் புதிய பட டைட்டிலை அறிவித்த மகேஷ்பாபு | இ.வி.கணேஷ்பாபுவின் 'ஆநிரை' குறும்படத்திற்கு கோவா திரைப்பட விழாவில் பாராட்டு | பிரித்விராஜ் படத்தை ஓவர்டேக் செய்யும் சிறிய நடிகரின் படம் | சிறையில் இருக்கும் நிலையில் நடிகர் தர்ஷினின் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு | கில்லி பாணியில் அடுத்த படத்தை இயக்கும் கீர்த்தீஸ்வரன் | 'திரெளபதி 2' படத்தில் ரக்ஷனாவின் பர்ஸ்ட் லுக் வெளியீடு | ஜிம்மில் பீஸ்ட் மோடில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா | நடிகர் அஜித்துக்கு 'ஜென்டில்மேன் டிரைவர்' விருது | பிப்ரவரியில் அஜித் படம் தொடங்குகிறது : ஆதிக் ரவிச்சந்திரன் சொன்ன புது தகவல் | நீங்க ஹீரோ ஆக வேணாம்னு சொன்னாரு : பார்க்கிங் தயாரிப்பாளரை கலாய்த்த சிவகார்த்திகேயன் |

தெலுங்குத் திரையுலகத்தின் முக்கிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று மைத்ரி மூவி மேக்கர்ஸ். அந்நிறுவனம் தற்போது அல்லு அர்ஜுன் நடிக்கும் 'புஷ்பா 2' படத்தைத் தயாரித்து வருகிறது.
கடந்த வாரம் அந்நிறுவனத்திலும், படத்தின் இயக்குனரான சுகுமார் இல்லத்திலும் வருமான வரித் துறை மற்றும் அமலாக்கத் துறை ஆகியவை சோதனை நடத்தின. ஐந்து நாட்களுக்கும் மேலாக சோதனை நடைபெற்றது. சோதனையில் முடிவில் சில சிறிய தவறுகள் நடந்துள்ளதாகவும், அவற்றைச் சரி செய்ய உத்தரவிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தன.
ஆனால், டோலிவுட் வட்டாரங்களில் வேறு விதமான செய்தி வருகிறது. வெளிநாடுகளிலிருந்து பெற்ற சுமார் 700 கோடி ரூபாய் முதலீடு பற்றி அமலாக்கத் துறை தீவிரமாக விசாரித்து வருகிறதாம். அது பற்றிய விசாரணை முடிவுகள் வரும் வரை 'புஷ்பா 2' படத்தின் படப்பிடிப்பை நிறுத்தி வைத்துள்ளதாகவும் சொல்கிறார்கள். இன்னும் ஒரு மாத காலத்திற்கு படப்பிடிப்பை நடத்த வாய்ப்பில்லையாம். எனவே, அல்லு அர்ஜுன் அவரது அடுத்த படம் பற்றிய பேச்சுவார்த்தையை நடத்த மும்பை சென்றுவிட்டாராம்.
'புஷ்பா' படத்தின் முதல் பாகம் 2021ம் ஆண்டு வெளிவந்தது. கடந்த வருட மத்தியிலேயே இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக வேண்டியது. ஆனால், மிகவும் தாமதமாக அக்டோபர் மாதம்தான் ஆரம்பித்தார்கள். தற்போது தெலுங்குத் திரையுலகத்தில் 'புஷ்பா 2' சோதனை விவகாரம்தான் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.