எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் |
மாநாடு, பத்துதல, வெந்து தணிந்தது காடு என தொடர் வெற்றிகளால் மகிழ்ச்சியில் இருக்கிறார் சிம்பு. வெந்து தணிந்தது காடு படத்தின் பாடல் வெளியீட்டு விழா ஒரு பல்கலை கழகத்தில் நடந்தபோதும், பத்துதல பாடல் வெளியீட்டு விழா நேரு ஸ்டேடியத்தில் நடந்தபோதும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடினார். இது சிம்புவிற்கே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
இதன் காரணமாக தனது ரசிகர்மன்ற மாவட்ட நிர்வாகிகளை தனது வீட்டுக்கு அழைத்து அவர்களுடன் கலந்துரையாடினார். பின்னர் அவர்களுக்கு பிரியாணி விருந்தளித்த சிம்பு தன் கையாலேயே ரசிகர்களுக்கு பிரியாணி பரிமாறினார். இதனால் ரசிகர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.
ரசிகர் மன்ற நிர்வாகிகளிடையே பேசிய சிம்பு “மன்றத்தின் பணிகளை விரிவுபடுத்துங்கள், மக்களுக்கு நிறைய சமூக சேவைகள் செய்து அவர்களின் நன்மதிப்பை பெறுங்கள். அப்போதுதான் நமது எதிர்கால திட்டமிடலுக்கு அது சாதகமாக இருக்கும். பட வெளியீட்டின்போது எந்த பணி செய்தாலும் பாதுகாப்பை முக்கியமாக கருதுங்கள்” என்றார்.