'டகாய்ட்' பட ரிலீஸை முன்னிட்டு ஹீரோவுடன் திருப்பதி தரிசனம் செய்த மிருணாள் தாக்கூர் | பிளாஷ்பேக்: புரட்சி நடிகரின் படத்தில், புலியுடன் சண்டையிட்ட புரட்சிப் பெண் திரைக்கலைஞர் | கஞ்சா பயன்படுத்தியதாக மலையாள நடிகரின் மகன் கைது ; தந்தையின் நம்பிக்கையை தகர்த்தார் | சென்சார் போர்டின் இரட்டை நிலைப்பாடு ; தி கேரளா ஸ்டோரி இயக்குனர் குற்றச்சாட்டு | துபாயில் சிக்கிக்கொண்ட பாலிவுட் நடிகை ; உதவி கேட்டு பிரதமருக்கு கோரிக்கை | பாடலை மாதக்கணக்கில் மெருகேற்றும் ஹாரிஸ்: இயக்குனர் ஏ.எல்.விஜய் | நடிப்பு உலகில் அடியெடுத்து வைத்த கிரிக்கெட் நடுவர் அனில் சவுத்ரி | ரஜினி, கமல் படத்தில் இந்த இளம் நடிகையா? | 'தனுஷ் 56' படப்பிடிப்பு செப்டம்பரில் துவங்குகிறது! | ஒரே நாளில் வெளியாகும் இரண்டு நீளமான படங்கள்! |

மலையாளத்தில் நேரம், பிரேமம் என அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களை இயக்கி மலையாளம் மட்டுமல்லாது தமிழ் ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்தவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். சமீபத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர் பிரித்விராஜ், நயன்தாராவை வைத்து இயக்கிய கோல்டு திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெற தவறியது. இந்த நிலையில் அடுத்ததாக அவர் தனது புதிய படம் ஒன்றை தமிழில் இயக்க உள்ளார். இது குறித்த அறிவிப்பையும் சமீபத்தில் அவர் வெளியிட்டு இருந்தார்.
இந்த நிலையில் தனது புதிய படத்திற்கு தேவையான புதிய நடிகர்களை தேர்ந்தெடுத்து அறிமுகப்படுத்தும் விதமாக ஆடிசனுக்கு அழைப்பு விடுத்துள்ளார் அல்போன்ஸ் புத்ரன். இதற்கான தகுதியாக நடிப்பு, பாட்டு, டான்ஸ், ரீல்ஸ் வீடியோ, பெயிண்டிங் என எந்த அனுபவம் உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம் என்றும் இது தமிழில் உருவாகும் படம் என்றாலும் எந்த மொழியை சேர்ந்தவர்களும், அவ்வளவு ஏன் 7 கண்டத்தில் உள்ளவர்களும் கூட இந்த ஆடிசனில் கலந்து கொள்ளலாம் என்றும் நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார் அல்போன்ஸ் புத்ரன்.
இதற்கு முன்னதாக அவர் நஸ்ரியா, சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன், மடோனா செபாஸ்டியன் என நான்கு கதாநாயகிகளை அறிமுகப்படுத்தி தென்னிந்திய திரையுலகத்திற்கு தந்தவர் என்பதால் இந்த புதிய படத்திலும் கதாநாயகிகள் மற்றும் புதிய நடிகர்களையும் நிச்சயம் அல்போன்ஸ் புத்திரன் உருவாக்குவார் என எதிர்பார்க்கலாம்.




