ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
சமீபத்தில் சசிகுமார் நடிப்பில் அறிமுக இயக்குனர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் வெளியான படம் அயோத்தி. வடநாட்டில் இருந்து ராமேஸ்வரத்திற்கு வரும் ஒரு சாதாரண குடும்பத்தினர், வந்த இடத்தில் தங்களது குடும்பத்தலைவியை பறிகொடுத்து விட்டு, அவரது உடலுடன் ஊர் திரும்ப அவதிப்படுவதும், நாயகன் சசிகுமார் பல இன்னல்களை சந்தித்து அவர்களுக்கு உதவுவதும் என மனிதநேயம் பற்றி இந்த படம் பேசியிருந்தது. இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பும் கிடைத்தது. சசிகுமார் நடிப்பில் நீண்ட இடைவெளிக்கு பிறகு அவருக்கு ஒரு கவுரவமான வெற்றி படமாகவும் இது அமைந்தது. இந்த படத்திற்கு பிரபல எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் கதை எழுதிஇருந்தார்.
அதேசமயம் படம் வெளியாகி சில நாட்கள் கழித்து இந்த படத்தின் கதை தான் 2011ல் தனது வலைப்பக்கத்திலும் மேலும் தனது முகநூல் பக்கத்திலும் தான் எழுதிய, தனது நண்பர் ஒருவருக்கு நிகழ்ந்த உண்மை சம்பவத்தை, அப்படியே தழுவி எடுக்கப்பட்டுள்ளது என எழுத்தாளர் மாதவராஜ் என்பவர் புகார் தெரிவித்தார்.. ஆனால் இது பற்றி எஸ்.ராமகிருஷ்ணன் தரப்பிலிருந்து பதில் வராவிட்டாலும் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் மந்திரமூர்த்தி ஆகியோர் இந்த விஷயத்தை பெரிதாக்க விரும்பவில்லை.
இந்த நிலையில் இந்த கதையை எழுதியதாக சொல்லப்படும் மாதவராஜை அழைத்து தயாரிப்பாளர், இயக்குனர் மந்திரமூர்த்தி இருவரும் அவரிடம் பேசி இந்த படம் ஓடிடியில் வெளியாகும் போது சம்பந்தப்பட்டவர்களுக்கு டைட்டில் கார்டில் அவர்களது பெயருக்கு அங்கீகாரம் கொடுப்பதாக கூறி உத்திரவாதம் அளித்ததை தொடர்ந்து இந்த கதை விவகாரம் தற்போது சுமூக முடிவுக்கு வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.