Advertisement

சிறப்புச்செய்திகள்

துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நாட்டு நாட்டு பாடலுக்கான ஆஸ்கர் விருது குறித்து விமர்சித்த தேசிய விருது நடிகை

16 மார், 2023 - 12:35 IST
எழுத்தின் அளவு:
Actress-ananya-chatterjee-criticize-Oscar-award-winning-naatu-naatu-song

சமீபத்தில் நடைபெற்று முடிந்த 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் இந்தியாவிலிருந்து நாட்டு நாட்டு என்கிற பாடலுக்கு சிறந்த ஒரிஜினல் பாடல் என்கிற பிரிவில் ஆஸ்கர் விருது கிடைத்தது. தி எலிபன்ட் விஸ்பரர்ஸ் என்கிற குறும்படத்திற்கு சிறந்த டாக்குமென்ட்ரி படத்திற்கான விருந்து கிடைத்தது.

மொழி பேதம் இன்றி அனைவருமே நீண்ட நாட்கள் கழித்து இந்தியாவிற்கு கிடைத்த இந்த இரண்டு விருதுகளை குறித்து தங்களது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து வருகின்றனர். ஆனால் தேசிய விருது பெற்ற பெங்காலி நடிகையான அனன்யா சட்டர்ஜி என்பவர் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது குறித்து, இதில் பெருமைப்பட என்ன இருக்கிறது என விமர்சித்துள்ளார்.

15 ஆண்டுகளாக பெங்காலியில் நடித்து வரும் அனன்யா சட்டர்ஜி 2010-ல் வெளியான அபோஹோமான் என்கிற பெங்காலி படத்தில் நடித்தற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றவர். அப்படிப்பட்ட ஒருவர் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது குறித்து தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நாட்டு நாட்டு பாடல் குறித்து நான் எதற்காக பெருமைப்பட வேண்டும் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்..? எல்லோரும் ஏன் அமைதியாக இருக்கிறீர்கள்..? நம்மிடம் உள்ள இசைத்தொகுப்பில் இருந்து அவ்வளவு சிறந்ததா இந்த பாடல் ? கோபத்தை தான் அதிகரிக்கிறது..” என்று கூறியுள்ளார்.

இவரது இந்த கருத்துக்கு சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நீங்கள் தேசிய விருது பெற்றபோது உங்களை யாரும் இப்படி விமர்சிக்கவில்லையே.. அப்படி விமர்சித்து இருந்தால் உங்களது மனநிலை எப்படி இருந்திருக்கும்.. எதற்காக இந்த பொறாமை எண்ணம் என்று பலர் சற்று நாகரீகமாகவும், சிலர் கடுமையாகவும் தங்களது கண்டனங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் ரஜினி படத்தில் நடிக்கும் செந்தில்மீண்டும் ரஜினி படத்தில் நடிக்கும் ... அயோத்தி கதை பிரச்சனையில் சுமூக முடிவு அயோத்தி கதை பிரச்சனையில் சுமூக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Muga Kannadi - chennai,இந்தியா
17 மார், 2023 - 09:17 Report Abuse
Muga Kannadi ஒரு டப்பாங்குத்து பாடலுக்கு ஆஸ்கார்... பணம் பாதாளம் வரைக்கு பாயும்....
Rate this:
BalaG -  ( Posted via: Dinamalar Android App )
17 மார், 2023 - 00:16 Report Abuse
BalaG தைரியமான பேச்சு. முதலில் எனக்கும் இதுதான் தோன்றியது. AR Rahman ஆஸ்கார் வாங்கியது கூட அவ்வளவு சிறப்பான இசை என்று சொல்ல முடியாது. அதை விட சிறப்பான இசையை அவரே எத்தனையோ படங்களுக்கு கொடுத்திருக்கிறார். அதே போல்தான் நம் இளையராஜா, இன்னும் பல இசைகளும், ஒரிஜினல் பாடல்களும் எத்தனையோ உள்ளது. ஏன் அது தெலுங்கு ரசிகர்களுக்கே தெரியுமே!!! ஒரு சலங்கை ஒலி, ஒரு சிப்பிக்குள் முத்து, இன்னும் எவ்வளவோ படங்கள் நம்மை வேறு உலகத்துக்கு கொண்டு சென்றது. இன்றும் அந்த படங்களின் BGM கேட்கும் போது நம் கண்ணில் நீர் வழியும். அதுதான் உண்மையான இசை. ஒரு காட்சியை பார்க்கும் போது அந்த காட்சிக்கான உணர்ச்சியை நமக்கு கடத்த வேண்டும். இசையை பற்றி ஒன்றும் தெரியாத தற்குறிக்கும் அந்த இடத்தில் அந்த காட்சிக்கான உண்மையான உணர்ச்சி வெளிபடவேண்டும். இதை எல்லாம் எப்போதோ நம் இந்திய சினிமா பார்த்துவிட்டது, செய்து விட்டது. அவர்களுக்கு டைட்டானிக் படம்தான் சிறந்த காதல் படம். நமக்கு அதை விட மிக சிறந்த காதல் படங்கள் 1000 உள்ளது நம் இந்தியாவில். ஆஸ்கார் உலக அளவில் நன்றாக மார்க்கெட்டிங் செய்யப்பட்டுள்ளது. அதனால் அதை அடைய பலருக்கு விருப்பம். வேறு ஒன்றும் இங்கு விஷயம் இல்லை. நம்மடைய நல்ல படங்களையும், இசையையும் தொடர்ந்து ஆஸ்கார் நோக்கி முயற்சி செய்து கொண்டு இருந்தால், ஒரு வருடம் இடைவெளி இல்லாமல் இந்திய படங்கள் ஆஸ்கார் வாங்கிக்கொண்டே இருக்கும். ராஜமௌலி கடந்த பல மாதங்களாக ஆஸ்கார் நோக்கி முயற்சி செய்து கொண்டு இருந்தார். அதற்கு பலன் கிடைத்தது. இன்னும் சிறிது நாட்களில் அவரே இந்த விஷயத்தை நமக்கு தெரிவிப்பார். நல்ல படங்களை தொடர்ந்து ஆஸ்கார்க்கு அனுப்ப சொல்லுவார். இதுதான் உண்மை
Rate this:
Easwar Kamal - New York,யூ.எஸ்.ஏ
16 மார், 2023 - 16:38 Report Abuse
Easwar Kamal சொன்னது சரிதான் இந்த விருது நேர் வழியில் வர வில்லை. வழக்கம்போல இது ராஜமௌலி உடைய வியாபார தந்திரத்தால் கிடைத்து. அதே இந்த எலிபாண்ட் விஸ்பிரஸ் அப்படி ஒரு பேச்சு இல்லை. உண்மைக்கு கிடைத்த விருதாகத்தான் பார்க்க தோன்றுகிறது.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in