டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! |

மலையாள நடிகையான மாளவிகா மோகனன் தமிழில் பேட்ட, மாஸ்டர் என இரண்டு படங்களில் தொடர்ந்து நடித்ததன் மூலம் முன்னணி நடிகையாக உயர்ந்தார். தனுஷ் உடன் மாறன் படத்தில் நடித்த மாளவிகா மோகனன் தற்போது விக்ரமுடன் இணைந்து தங்கலான் மற்றும் மலையாளத்தில் கிறிஸ்டி ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் பிரபலங்கள் அனைவரும் ஸ்டார் ஹோட்டல்கள், கடற்கரை என புத்தாண்டு கொண்டாட்டத்தை கொண்டாட மாளவிகா மோகனன் ஹிமாலயா பக்கம் சென்று அமைதியாக தனது புத்தாண்டு தினத்தின் முதல் நாளை கழித்திருக்கிறார்.
மலைப்பகுதியில் தான் தங்கியிருந்த இடத்திலிருந்து எடுக்கப்பட்ட தன்னுடைய சில போட்டோக்களை பகிர்ந்து கொண்டுள்ளார் மாளவிகா மோகனன். மேலும் புத்தாண்டு பற்றி அவர் கூறும்போது, “இந்த வருடத்தின் முதல் நாள் அவ்வளவு அழகானதாக இருந்தது. இங்கு என்னைச் சுற்றிலும் மலைகளும் இளஞ்சிவப்பு நிற பூக்களுமாக இந்த நாளை ரொம்பவே இனிமையாக்கி விட்டன. கடந்தாண்டு எனக்கு மிகவும் நல்லபடியாகவே கடந்து சென்றதாக நான் உணர்கிறேன். இந்தாண்டும் அதே போல நிறைய மகிழ்ச்சி, அன்பு, முத்தங்கள் நிறைந்ததாக உங்களுக்கும் இருக்கும் என நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.