காதலாகி, கசிந்துருகி… பிரிவாகி… - தமிழ் சினிமா பிரபலங்களின் பிரிவுகள் | யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் ரியோ ராஜ்? | ஜூன் 1ல் ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழா | மே. 24ல் வெளியாகும் பி.டி. சார் | 'கில்லி' - 25 நாளில் இத்தனை கோடி வசூலா ? | இரண்டே நாளில் அஜித்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? | கருப்பு பணத்தை வெள்ளை ஆக்குகிறேனா? - நடிகர் பாலா அதிரடி பதில் | சூர்யா படத்தில் ஹாலிவுட் பைட் மாஸ்டர் | தெலங்கானாவில் 10 நாட்களுக்கு தியேட்டர்களை மூட முடிவு | சைந்தவி உடனான பிரிவை வைத்து விவாதம் : தமிழர் மாண்பு குறைந்து விட்டதா என ஜிவி பிரகாஷ் ஆதங்கம் |
மலையாளத்தில் பிருத்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள காபா என்கிற திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. இந்த படத்தை பிரபல இயக்குனர் ஷாஜி கைலாஷ் இயக்கியுள்ளார். கதாநாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மலையாள திரைப்பட இயக்குனர்கள் சங்கத்திற்கு நிதி திரட்டும் விதமாக இந்த படம் உருவாகி உள்ளது. இந்தப் படத்தில் முதலில் கதாநாயகியாக நடிக்க இருந்தவர் மஞ்சுவாரியர் தான். அவரை மனதில் வைத்துதான் நாயகி கதாபாத்திரம் எழுதப்பட்டது. ஆனால் சில காரணங்களால் அவரால் இந்தப் படத்தில் நடிக்க இயலாமல் போனது.
அதைத் தொடர்ந்து அபர்ணா பாலமுரளி இந்த படத்தில் கதாநாயகியாக நுழைந்தார். சமீபத்தில் நடைபெற்ற இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் நாயகி அபர்ணா பாலமுரளி பேசும்போது, “நான் ஒரு ரசிகையாக மாறிய தருணம் இது. சில காரணங்களால் மஞ்சு சேச்சி இந்த கதாபாத்திரத்தில் நடிக்க முடியாமல் போனது. ஆனால் நான் இந்த கதாபாத்திரத்தில் நடித்து இருப்பதை மகிழ்ச்சியாகவும் அதேசமயம் பெருமையாகவும் உணர்கிறேன்” என்று கூறினார்.