ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
மலையாளத்தில் பிருத்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள காபா என்கிற திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. இந்த படத்தை பிரபல இயக்குனர் ஷாஜி கைலாஷ் இயக்கியுள்ளார். கதாநாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மலையாள திரைப்பட இயக்குனர்கள் சங்கத்திற்கு நிதி திரட்டும் விதமாக இந்த படம் உருவாகி உள்ளது. இந்தப் படத்தில் முதலில் கதாநாயகியாக நடிக்க இருந்தவர் மஞ்சுவாரியர் தான். அவரை மனதில் வைத்துதான் நாயகி கதாபாத்திரம் எழுதப்பட்டது. ஆனால் சில காரணங்களால் அவரால் இந்தப் படத்தில் நடிக்க இயலாமல் போனது.
அதைத் தொடர்ந்து அபர்ணா பாலமுரளி இந்த படத்தில் கதாநாயகியாக நுழைந்தார். சமீபத்தில் நடைபெற்ற இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் நாயகி அபர்ணா பாலமுரளி பேசும்போது, “நான் ஒரு ரசிகையாக மாறிய தருணம் இது. சில காரணங்களால் மஞ்சு சேச்சி இந்த கதாபாத்திரத்தில் நடிக்க முடியாமல் போனது. ஆனால் நான் இந்த கதாபாத்திரத்தில் நடித்து இருப்பதை மகிழ்ச்சியாகவும் அதேசமயம் பெருமையாகவும் உணர்கிறேன்” என்று கூறினார்.