ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
முன்னாள் உலக அழகியான ஐஸ்வர்யா ராய் நடிகையாக அறிமுகமானது மணிரத்னம் இயக்கத்தில் வந்த 'இருவர்' படத்தில். அதன் பிறகு தமிழில் 'ராவணன்', ஹிந்தியில் 'குரு' ஆகிய படங்களிலும் நடித்திருக்கிறார். நான்காவது முறையாக 'பொன்னியின் செல்வன்' படத்திலும் மணிரத்னத்துடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.
இப்படத்தின் மும்பை புரமோஷன் நிகழ்வுகள் நேற்றும் இன்றும் நடக்கிறது. நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், “ஒரு சரித்திரப் படத்தில் ஐஸ்வர்யா ராய் ராணியாக நடிப்பது பற்றி அவரது மகள் ஆராத்யா என்ன சொன்னார்,” என்று கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஐஸ்வர்யா ராய், “ஆராத்யா இன்னும் படம் பார்க்கவில்லை. ஆனால், படப்பிடிப்பு சமயத்தில் அவள் ஆச்சரியத்தில் மயங்கி இருந்தார். இங்கு குழந்தைகளுடன் இருப்பவர்கள் பலர். ஒரு சரித்திரப் படத்தைப் பார்ப்பது எப்போதுமே உற்சாகமாக இருக்கும். படப்பிடிப்புத் தளத்தைப் பார்த்த வாய்ப்பு ஆராத்யாவுக்குக் கிடைத்தது. அதை அவள் பார்த்த போது மெய் சிலிர்த்துப் போனாள். அதை அவளது கண்களில் பார்த்தேன்.
மணிரத்னத்தின் மீது எனது மகள் பிரமிப்பில் இருக்கிறாள். அவருடன் பணிபுரிந்தது எனது பாக்கியம் என நினைக்கிறேன். ஆராத்யாவும் அவரை மதிக்கிறாள். அவள் மீது மணிரத்னம் சாரின் பாசமும் இனிமையானது. ஒரு நாள் படப்பிடிப்புக்கு ஆராத்யா வந்த போது 'ஆக்ஷன்' சொல்லும் வாய்ப்பை அவளுக்குத் தந்தார் மணிரத்னம். அதிலிருந்து அவளால் மீள முடியவில்லை. 'எனக்கு அந்த வாய்ப்பை சார் கொடுத்தார்,' எனப் பெருமையுடன் சொல்லிக் கொண்டிருந்தாள். 'மை காட்' வேறு யாருக்கும் அவர் அப்படி ஒரு வாய்ப்பு தந்ததில்லை என்று சொன்னேன். அதுதான் மிகவும் உற்சாகமான ஒரு மறக்க முடியாத அனுபவம் என நான் நினைக்கிறேன். அது விலைமதிப்பற்றது, அதை அவள் பெரிதாக நினைக்கிறாள். அவள் வளர வளர இதை இன்னும் பெருமையாக நினைப்பாள் எனக் கருதுகிறேன்,” என்றார் ஐஸ்வர்யா ராய்.
ஆராத்யா ஆக்ஷன் சொன்ன காட்சியை தியேட்டர்களில் பார்க்கும் போது இன்னும் உற்சாகமாகவே நினைப்பார். அதைப் பார்க்கும் அம்மா ஐஸ்வர்யாவின் பாசமும் இன்னும் அதிகமாக இருக்கும்.