பிகினி தோற்றம் : கிரித்தி சனோன் வெளியிட்ட தகவல் | ராம்சரண் மனைவியிடம் இருந்து திரிஷாவுக்கு பறந்து வந்த பரிசுப் பெட்டகம் | ஜனநாயகன் லீக் விவகாரம் : மேலும் ஒருவர் கைது | 'மாம் 2' படப்பிடிப்பில் குஷி கபூரின் நடிப்பால் அதிருப்தியில் படக்குழுவினர் | அம்மா இறந்த ஒரு வாரத்திற்குள் ரேஸிங்கில் இறங்கிய அஜித் குமார் | ஒருவர் சம்பாதித்தால் போதும் ; மகனின் மனோபாவம் குறித்து மோகன்லால் பெருமிதம் | 'திரிஷ்யம்' நடிகையின் புகாரை விசாரிக்க ஐவர் குழு அமைத்த ஸ்வேதா மேனன் | சத்ரபதி சிவாஜி டீசர்ட் அணிந்து நடனமாடியதற்கு மன்னிப்பு கேட்ட ஜெனிலியாவின் கணவர் | வெளி மாநிலங்களில் 70 கோடி வசூலித்த 'கருப்பு' | ஓடிடியில் மீண்டும் 'துரந்தர்': இந்த வாரம் மிஸ் பண்ணிடாதீங்க...! |

கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து கடந்த வாரம் திரைக்கு வந்த படம் வெந்து தணிந்தது காடு. இந்தப் படம் நல்ல வசூல் கொடுத்து வருவதாக படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேசன் தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே இப்படத்தின் முதல் பாகம் வெற்றி பெற்றால் கண்டிப்பாக இரண்டாவது பாகம் தொடங்கப்படும் என்று அறிவித்திருந்தார் கவும் மேனன். இந்த நிலையில் தற்போது தயாரிப்பாளர் ஐசரி கணேசனும் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என்று தெரிவித்திருக்கிறார்.
இப்படத்தின் சக்சஸ் மீட் நடைபெற்ற போது, வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் தொடங்கிவிட்டது. இயக்குனர் கவுதம் மேனன் மற்றும் எழுத்தாளர் ஜெயமோகனும் இணைந்து இரண்டாம் பாகத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் இறங்கி விட்டதாகவும், அந்த பணிகள் முடிவடைந்ததும் படப்பிடிப்பை தொடங்க தயாராக உள்ளது என்று தெரிவித்திருக்கிறார். அதனால் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாம் பாகம் தொடங்குவது உறுதியாகிவிட்டது. மேலும், வெந்து தணிந்தது காடு திரைக்கு வந்து நான்கு நாட்களில் 50 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.




