தடை போடாதீங்க, என்னை விட்டுவிடுங்க : ‛தாய் கிழவி' விழாவில் சிவகார்த்திகேயன் உருக்கம் | தென்னிந்திய சினிமாவில் நிகழ்ந்த அசவுகரியம் : டாப்சி | பவுன்தாயின் சேட்டைகளுடன் பட்டையை கிளப்பும் 'தாய் கிழவி' டிரைலர் | நெகட்டிவா பேசுறவங்களை சுத்தமாக பிடிக்காது என்கிறார் சமந்தா | பிளாஷ்பேக்: பல்வேறு சிறப்பிற்கும், புதுமைக்கும் புகலிடமாய் அமைந்த பைந்தமிழ் திரைக்காவியம் “பாவமன்னிப்பு” | மூன்றாவது முறையாக கிருஷ்ணாவுக்கு ஜோடியான பிந்து மாதவி | மணிரத்னம் படத்தில் இணையும் விஜய் சேதுபதி, சாய் பல்லவி | கோவில் திருவிழாவில் பங்கேற்றதால் சலசலப்பு ; அழகான விளக்கம் கொடுத்த அன்னா பென் | இப்போது வரை என் படங்களை என் குழந்தைகள் பார்க்கவில்லை ; ஷாலினி அஜித் | வெங்கடேஷ் படத்திற்காக தெலுங்கில் நுழைந்த யோகி பாபு |

ஹன்சிகாவின் 50வது படம் மஹா இம்மாத இறுதியில் வெளியாகிறது. அவர் அளித்த பேட்டி: ‛மஹா' படம் வெளியாவதில் சில காலம் தாமதமாகிவிட்டது. இனி அடுத்தடுத்து என் படங்கள் வெளியாகும். விரைவிலேயே 60வது படம் வெளியாகும். 105 மினிட்ஸ் படத்தில் நான் மட்டுமே நடித்துள்ளேன். ஒரே டேக்கில் எடுக்கப்பட்ட படம் இது. இதற்காக 20 நாட்களுக்கும் மேலாக ஒத்திகை நடந்தது. இது ஹாரர் த்ரில்லர் படம். ஒரு ஷாட் முடிவதற்குள், அடுத்த ஷாட்டுக்கு நானே ஓடிப்போய் அந்த காட்சிக்கு ஏற்ப தயாராக வேண்டும். நயன்தாராவுக்கு திருமணம் ஆகிவிட்டது அடுத்து உங்களுக்கு எப்போது என என்னிடம் கேட்கின்றனர். நான் எப்போதோ திருமணம் செய்து விட்டேன். அதாவது என் நடிப்பு தொழிலை திருமணம் செய்து விட்டேன். இப்போதைக்கு நடிப்பில் மட்டுமே என் கவனம். அதேபோல் அரசியல் எல்லாம் நமக்கு தேவையில்லாத ஒன்று.
இவ்வாறு அவர் கூறினார்.