ஜனநாயகன் பட வழக்கில் ஜன., 27ல் தீர்ப்பு | அஜித் 64ல் நிறைய சர்ப்ரைஸ் இருக்கு : ஆதிக் ரவிச்சந்திரன் | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரீத்தி முகுந்தன் | மணிகண்டன் படத்தை இயக்கும் தேசிங்கு பெரியசாமி | விஜய்க்கு தம்பியாக தனுஷ் : இயக்குனர் ஏ.வெங்கடேஷ் சொன்ன தகவல் | கவின் படத்தில் இணைந்த சிம்ரன் | கேரள தேர்தலில் போட்டியிடுகிறேனா : பாவனா பதில் | 32 வருடங்களுக்குப் பிறகு 4வது முறையாக அடூர் கோபாலகிருஷ்ணன் உடன் இணையும் மம்முட்டி | மலையாளத்தில் காளிதாஸ் ஜெயராமின் புதிய படப்பிடிப்பு துவங்கியது | 84 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழக்கு : தனுஷ் பட இயக்குனர் விளக்கம் |

சாய்பல்லவி நடித்துள்ள விராட பருவம் படம் இன்று வெளியாகி உள்ளது. இந்த படத்தின் புரமோசன் நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களாக கலந்து கொண்டார் சாய்பல்லவி. இதன் ஒரு பகுதியாக சாய்பல்லவி அளித்த ஒரு பேட்டியில் மதங்கள் குறித்து ஒரு கருத்தை வெளியிட்டார்.
காஷ்மீரில் பண்டிட்டுகள் கொல்லப்படுவதும், பசு பாதுகாப்பு என்ற பெயரில் இறைச்சி விற்ற இஸ்லாமியர்கள் கொல்லப்படுவதும் இரண்டுமே மதவன்முறை தான். மதத்தின் பெயரால் ஒரு உயிர்கூட போகக்கூடாது என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ஜதராபாத் சுல்தான் பஜார் காவல் நிலையத்தில் பஜ்ரங் தளத்தைச் சேர்ந்த அகில் என்பவர் சாய்பல்லவி மீது புகார் கொடுத்துள்ளார். நடிகை சாய் பல்லவி காஷ்மீர் பயங்கரவாதிகளை பசு காவலர்களுடன் ஒப்பிட்டு பேசி உள்ளார். அவரின் இந்த கருத்து நாட்டின் அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாகும். அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கொடுத்த புகார் மனுவில் கூறியிருக்கிறார். இந்த புகாரின் மீது இதுவரை போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை.




