ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் | வெப் தொடரான ராஜேஷ்குமார் நாவல் |

அண்ணாத்த படத்தை அடுத்து நெல்சன் இயக்கும் தனது 169வது படத்தில் நடிப்பதற்கு தயாராகி கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். அதேப்போல் எச்.வினோத் இயக்கிய வலிமை படத்தை அடுத்து தற்போது மீண்டும் அவரது இயக்கத்தில் தனது 61ஆவது படத்தில் நடித்து வருகிறார் அஜித் குமார். அவருக்கு ஜோடியாக மஞ்சுவாரியர் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நடிகர் ரஜினியை அவரது வீட்டிற்கு சென்று அஜித் குமார் சந்தித்ததாக ஒரு புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஆனால் அந்தப் புகைப்படத்தை பார்க்கையில் ரஜினியும் அஜித்தும் நேரில் சந்தித்துக்கொண்ட புகைப்படமாக தெரியவில்லை. தனித்தனியே அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை மார்பிங் முறையில் இணைத்து வெளியிட்டது போல் தெரிகிறது. இதனால் நெட்டிசன்கள் மிகுந்த குழப்பத்துக்கு உள்ளாகி வருகிறார்கள்.




