ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
1984ஆம் ஆண்டு பூவே பூச்சூடவா என்ற படத்தில் அறிமுகமான நதியா, அதன் பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பரவலாக நடித்து வந்தார். ரஜினியுடன் ராஜாதி ராஜா படத்தில் நடித்த பிறகு திருமணம் செய்து கொண்ட நதியா, திருமணத்திற்கு பிறகும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது தெலுங்கில் நானி, நஸ்ரியா இணைந்து நடித்துள்ள அன்டே சுந்தராநானிகி என்ற படத்தில் நதியாவும் முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடித்துள்ளார். முதன்முதலாக இந்த படத்திற்காக தெலுங்கில் தனது சொந்த குரலில் டப்பிங் பேசி இருக்கிறார். இதுகுறித்த தகவலை வெளியிட்டுள்ள நதியா, நான் டப்பிங் பேசுவதற்கு ஊக்கமளித்த இயக்குனர் மற்றும் குழுவினருக்கு மிக்க நன்றி என்று தெரிவித்திருக்கிறார்.