டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

கடந்த 40 வருடமாக மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் மம்முட்டி. அவரது மகன் துல்கர் சல்மான் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகி அவரும் பத்து வருடங்களை கடந்து விட்டார். இந்த பத்து வருடங்களுக்குள் தந்தை-மகன் இருவரது படங்களும் ஒரே தேதியில் ரிலீசாகும் சூழல் வந்தபோது ஏதோ ஒரு தயாரிப்பாளர் விட்டுக்கொடுத்து கொஞ்சம் இடைவெளிவிட்டு இரண்டு படங்களையும் ரிலீஸ் செய்து வந்தார்கள்.
இந்த நிலையில் முதன்முறையாக மம்முட்டி, துல்கர் சல்மான் இருவரது படங்களும் இன்று (மார்ச் 3) ஒரே நாளில் வெளியாக உள்ளது. தமிழில் நடன இயக்குனர் பிருந்தா இயக்குனராக அறிமுகமாகும் ஹே சினாமிகா என்கிற படத்தில் துல்கர் கதாநாயகனாக நடித்துள்ளார். காஜல் அகர்வால், அதிதி ராவ் ஹைதரி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
அதேபோல மலையாளத்தில் மம்முட்டி நடித்த பீஷ்ம பருவம் படமும் வெளியாகி உள்ளது. இரண்டுமே மலையாளத்தில் உருவாகி இருந்தால் நிச்சயம் அங்குள்ள தயாரிப்பாளர்கள் கூடிப்பேசி இரண்டு படங்களுக்கும் இடைஞ்சல் வராமல் ரிலீஸ் தேதியை மாற்றி இருப்பார்கள். ஆனால் இங்கே துல்கர் படம் தமிழிலும், மம்முட்டி படம் மலையாளத்திலும் வெளியாவதால் இரண்டு படங்களுக்கும் வசூல் ரீதியாக எந்த பிரச்சினையும் இருக்காது என்றே தெரிகிறது.




