100 கோடிக்கு மேல் விற்கப்பட்டதா 'ஜனநாயகன்' ? | ரூ.10 கோடி டெபாசிட் செய்ய விஷாலுக்கு கோர்ட் உத்தரவு | விஜய் சேதுபதி, பூரி ஜெகன்னாத் படத்தின் படப்பிடிப்பு நிறைவு | ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு கீர்த்தி சுரேஷ் படம் | தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த நிவேதா பெத்துராஜ் | 2025 : 11 மாதங்களில் 250ஐக் கடக்கும் தமிழ்ப் பட வெளியீடுகள் | படம் இயக்க தயாராகும் கிர்த்தி ஷெட்டி | சிக்ஸ் பேக் மூலம் என்னை நானே செதுக்கி கொண்டேன் : மகத் சொல்கிறார் | 5 கேரக்டர்கள், 6 ஆண்டு உழைப்பு : ஒருவரே வேலை செய்த ஒன்மேன் | தனுஷின் ஹிந்தி படத்தில் இரண்டு கிளைமாக்ஸ் : கீர்த்தி சனோன் தகவல் |

தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதிகளாக வலம் வரும் அஜித்குமார் - ஷாலினி ஆகிய இருவரும் சோசியல் மீடியாவில் இதுவரை கணக்கு தொடங்கவில்லை. என்றாலும் அஜித் பெயரில் ஏராளமான போலி வலைதளப் பக்கங்கள் தொடங்கப்பட்டுள்ளன. அதன் காரணமாக இது போன்ற கணக்குகளை அஜித்தின் ரசிகர்கள் தொடர வேண்டாம் என்று ஏற்கனவே அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா ஒரு தகவல் வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் தற்போது அஜித் மனைவி ஷாலினி பெயரிலும் போலி டுவிட்டர் கணக்கு ஒன்று தொடங்கப்பட்டு உள்ளது. இதையடுத்து அஜித்தின் பிஆர்ஓ சுரேஷ் சந்திரா கூறுகையில், ஷாலினி அஜித்குமார் பெயரில் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு எதுவும் இல்லை என்று தெரிவித்திருப்பவர், அவரது பெயரில் உருவாக்கப்பட்டுள்ள அந்த கணக்கு போலியானது. அதனால் அந்தக் கணக்கை யாரும் பின்தொடர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார் .




